நடிகர் ரஜினிகாந்த், தாம் அரசியல் களத்தில் இறங்கப்போவதில்லை என்று அண்மையில் திட்டவட்டமாக அறிவித்ததை அடுத்து மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம் என அந்த மன்றமே தெரிவித்துள்ளது.
மக்கள் மன்றத்தில் இருந்து விலகி வேறு கட்சியில் இணையலாம் என்றும் வேறு கட்சிகளில் இணைந்தாலும் அவர்கள் எப்போதும் ரஜினி ரசிகர்கள்தான் என்பதை மறுந்துவிடக்கூடாது என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. உடல்நிலை காரணமாக அரசியலில் இறங்கப்போவதில்லை என்று ரஜினிகாந்த் கூறியதால் அதிருப்தி அடைந்த அவரது ரசிகர்கள் போராட்டத்தில் முன்னதாக ஈடுபட்டிருந்தனர். தன்னை மேலும் வேதனைப்படுத்தாமல் அந்தப் போராட்டத்தை நிறுத்தும்படி ரஜினிகாந்த் கூறினார்.