திருமண அழைப்பிதழில் அச்சடிக்கப்பட்ட 'கியூஆர்' குறியீட்டைப் பயன்படுத்தி உறவினர்கள் மணமக்களுக்கு தங்களது கைபேசி வழியாகவே மொய்ப் பணத்தை எழுதினர். படம்: ஊடகம்
மதுரை: மதுரையில் நடந்த திருமணம் ஒன்றில் புதுமையான முறையில்மொய்ப் பணத்தை மணமக்கள் அன்பளிப்பாக பெற்றுள்ளனர். 'கியூஆர்' குறியீட்டை 'ஸ்கேன்' செய்தால் தம்பதிகளின் வங்கிக் கணக்கில் மொய்ப் பணம் ஏறிவிடும் விதத்தில் வைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரூவில் பொறியாளர்க ளாகப் பணிபுரியும் மதுரையைச் சேர்ந்த மணமகள் சிவசங்கரியும் மணமகன் சரவணனும் நேற்று முன் தினம் திருமணம் செய்தனர்.
அவர்கள் கைபேசி செயலியில் தங்களது வங்கிக் கணக்கை இணைத்து 'கியூஆர்' குறியீடு உருவாக்கினர். அதனை அச்சடித்து மொய் எழுத வரும் பகுதியிலும் வைத்துக்கொண்டனர். தங்களது திருமண அழைப்பிதழிலும் அந்த 'கியூஆர்' குறியீடு அச்சிடப்பட்டு இருந்தது. இதைக்கண்டு ஆச்சரிய மடைந்த உறவினர்கள் 'கூகுள் பே, போன் பே' ைகபேசி செயலி வழி மொய்ப் பணம் எழுதினர்.
"கொரோனா காலம் என்பதால் பெரும்பாலான உறவினர்கள் திரு மணத்துக்கு வருவதைத் தவிர்த்தனர். இருந்தாலும் மொய் எழுத விரும்பிய அவர்கள் இம்முறையில் பணம் வைக்க அதிக வரவேற்பு தந்தனர்," என்று திருமணவீட்டார் கூறினர்.

