தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு: செய்யக்கூடாதவை என்னென்ன?

தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு: செய்யக்கூடாதவை என்னென்ன?

2 mins read
8da49ca5-ff89-460f-b90d-6d5b20c13a46
படம்: ஊடகம் -

கல்வி வளர்ச்­சிக்கு முக்­கிய அடித்­த­ள­மி­டும் பொதுத் தேர்­வு­களை எழு­த­வுள்ள 10, 12ஆம் வகுப்­பு­களில் படிக்­கும் மாண­வர்­களுக்கு மட்­டும் முதல்­கட்­ட­மாக இன்­று ­மு­தல் பள்­ளி­கள் திறக்­கப்­பட உள்­ளன.

கடந்த ஒன்­பது மாதங்­க­ளுக்­குப் பிறகு பள்­ளி­கள் மீண்­டும் திறக்­கப்படு­வதை அடுத்து, மாநி­லம் முழு வதும் உள்ள அனைத்­துப் பள்ளிகளி­லும் பள்­ளிக் கல்­வித்­துறை அதி­கா­ரி­கள் நேற்று நேரில் ஆய்வு நடத்தினர். அப்­போது, கல்வி வளா­கங்­க­ளைத் தூய்­மைப்­ப­டுத்­தும் பணி­களும் தீவி­ர­மாக நடந்­தன.

ஆந்­திர மாநி­லத்­தில் பள்­ளி­கள் திறக்­கப்­பட்ட பின்­னர் ஏரா­ள­மான மாண­வர்­களும் ஆசி­ரி­யர்­களும் கொரோனா கிரு­மித்­தொற்­றின் பாதிப்­புக்கு ஆளா­கி­னர்.

இந்த நிலைமை தமி­ழ­கத்­தி­லும் ஏற்­பட்­டு­வி­டக் கூடாது என்­ப­தில் கல்­வித்­துறை அதி­கா­ரி­கள் கண்­ணும் கருத்­து­மாக உள்­ள­னர்.

இந்­நி­லை­யில், பள்­ளிக்கு வரும் மாண­வர்­கள் பின்­பற்­ற­வேண்­டிய நெறி­மு­றை­கள் குறித்து பள்­ளிக் கல்­வித்­துறை அறி­வு­ரை­களை அறிக்­கை­யாக வெளி­யிட்­டுள்­ளது.

அதில், "அனை­வ­ரும் கட்­டா­யம் முகக்­க­வ­சம் அணி­ய­வேண்­டும், கிரு­மி­நா­சினி கொண்டு கைகளைச் சுத்­தப்­ப­டுத்­து­தல் வேண்­டும்.

"ஒரு வகுப்­ப­றைக்கு 25 மாண­வர்­கள் மட்­டுமே அனு­ம­திக்­கப்­பட வேண்­டும், உடல் ெவப்­ப­நி­லையைப் பரி­சோ­திக்­க­வேண்­டும்.

"அதே­ ச­ம­யம், பள்ளி வளா­கங்­களில் மாண­வர்­கள் எச்­சில் துப்­பக் கூடாது, உண­வுப் பொருட்­க­ளைப் பரி­மா­றிக்கொள்­ளக் ­கூ­டாது.

"மாண­வர்­களைப் பள்­ளிக்கு வரும்­படி கட்­டா­யப்­ப­டுத்­தக் கூடாது. மாண­வர்­கள் அவர்­க­ளது பெற்­றோ­ரி­டம் ஒப்­பு­தல் கடி­தம் பெற்று வர வேண்­டும்," எனக் கூறியுள்­ளது.

இதுகுறித்து, பள்­ளிக் கல்­வித் துறை இயக்­கு­நர் கண்­ணப்­பன் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறு­கை­யில், "அனைத்து வகுப்­ப­றை­க­ளி­லும் கிரு­மி­நா­சினி வைக்­கப்­பட்­டுள்­ளது. அனைத்துப் பள்­ளி­க­ளி­லும் மாண­வர்­க­ளுக்கு வைட்­ட­மின், துத்­த­நாக மாத்­தி­ரை­கள் வழங்­கப்­படும்.

"உணவு உண்­ணும் நேரத்­தில் முகக்­க­வ­சத்தை அப்­பு­றப்­ப­டுத்தி, மீண்­டும் அணி­வதை ஆசி­ரி­யர்­கள் கண்­கா­ணிக்கவும் அறிவுறுத்தி உள்ளோம்," என்றார்.

திருப்­பூர்: தமி­ழ­கத்­தில் மருத்துவர்­கள், தாதி­கள் உள்­ளிட்ட முன் களப் பணி­யா­ளர்­க­ளுக்கு முதற் கட்­ட­மா­க கொரோனா தடுப்­பூசி போடப்­பட்டு வரு­கிறது.

ஆனா­லும், இந்த ஊசி­யால் உயி­ருக்கு ஊறு விளை­யுமோ என்ற பயத்­தில் பல­ரும் ஊசி­யைப் போட்­டுக்­கொள்ள தயக்­கம் காட்­டு­வ­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், "கொரோனா தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்ட யாருக்­கும் இது­வரை பக்­க­வி­ளைவு கள் ஏற்­ப­ட­வில்லை. எனவே, பதிவு செய்­த­வர்­கள் வாய்ப்பை நழுவ விடாமல் தடுப்­பூசியைப் போட்­டுக்­கொள்­ளுங்­கள்,'' என்று திருப்­பூர் அரசு மருத்­து­வக் கல்­லூரி முதல்வர் வள்ளி கூறி­னார்.

இதே­போல், சென்னை நுங்­கம் பாக்­கம், கிரீம்ஸ் சாலை­யில் உள்ள அப்போலோ மருத்­து­வ­ம­னை­யில் பணி­யாற்­றும் குடல் சார்ந்த செரி­மா­னக் கோளாறு பிரச்­சிை­னக் கான தலைமை மருத்­து­வர் கே.ஆர்.பழ­னி­சா­மி­யும் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­டார்.

அதன்­பி­றகு செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­ய­வர், "தடுப்­பூ­சியை நானும் போட்­டுக்­கொண்­டேன். வலியில்லை. பெரிய அள­வில் பக்க விளை­வு­கள் இருக்­காது. சில­ருக்கு லேசான தலை­வலி, காய்ச்­சல் வர­லாம். இது பொது­வா­ன­து­தான். இதற்­காக தடுப்­பூ­சியை தவிர்ப்­பது நல்­லதல்ல. பயம் தேவை­யில்லை," என்றார்.