இலங்கை கடற்படை யினர் நடத்திய தாக்குதலில் மீன்பிடி படகோடு நான்கு மீனவர்கள் கடலில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில், இலங்கை அரசுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் தமிழகத் தலைவர் களும் மாநிலம் எங்கும் உள்ள கடலோர மீனவர்களும் இந்த மனித நேயமற்ற செயலைக் கண்டித்துள்ள னர். ஆங்காங்கே மீனவர்கள் சாலை மறியல், உண்ணாவிரதப் போராட்டங் களையும் தொடர்ந்து வருகின்றனர்.
இந்தியாவுக்கான இலங்கை தூதரை அழைத்து இந்த விவகாரம் குறித்து தனது கடும் எதிர்ப்பையும் அதிருப்தியையும் இந்திய வெளியுறவு அமைச்சு பதிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக இந்த அமைச்ச கம் வெளியிட்டுள்ள அறிக்கை யில், “இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சரை அழைத்து தமி ழக மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் அவர்கள் உயிரி ழந்த சம்பவத்திற்கும் வலுவான எதிர்ப்பும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அத்துடன், டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரையும் அழைத்து மத்திய அரசின் தரப்பில் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள் ளோம்,” எனக் கூறியுள்ளது.
இதற்கிடையே, மீனவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக் குழுக்களை அமைத்து இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.
அதிபர் ராஜபக்சே உத்தரவுப்படி ஒரு குழுவும் கடற்தொழில் அமைச்ச கத்தின் கீழ் ஒரு குழுவும் மீனவர்கள் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தவுள்ளன.
மீனவர்களின் உடல்களைப் உடற்கூர் பரிசோதனை செய்யாமல் இந்தியாவிடம் ஒப்படைக்கவும் இலங்கை அரசு முடிவு செய்துள்ள தாக இலங்கை கடற்தொழில்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
இதனிடையே, தமிழக மீன வர்கள் நால்வரின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தர விட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒரு வருக்கு அரசுப் பணி வழங்கவும் உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.