ஈரோடு தேர்தல் பிரசாரத் தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, "நான் தமிழன் அல்ல, ஆனால் தமிழ் கலாசாரத்தை மதிக்கிறேன்," என்று கூறினார்.
தமிழகத்தில் 'வணக்கம் தமிழகம்' என்ற பெயரில் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் ெசய்து வருகிறார். இதன்படி நேற்று ஈரோடு மாவட்டத்தில் அவர் தீவிர பிரசாரம் செய்தார்.
அப்போது பேசிய ராகுல், "நான் எனது மனதின் குரலை பேச வரவில்லை, உங்களின் குரலை கேட்க வந்துள்ளேன். நான் தமிழன் அல்ல, ஆனால் தமிழ் கலாசாரத்தை மதிக்கிறேன். நாட்டின் வளர்ச்சிக்குத் தமிழக இளைஞர்களின் பங்கு அளப்பரியது. தமிழகத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வர முடியும். தமிழக மக்களுடன் எனக்கு இருப்பது அரசியல் பிணைப்பல்ல, குடும்ப பிணைப்பு," என்று தெரிவித்தார்.
முன்னதாக கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
கோவையில் அவர், 'தொழில் களுக்குத் தோள் கொடுப்போம்' எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.
"தொழில் துறையின் முது கெலும்பாக கோவை திகழ்கிறது. மத்திய அரசு அறிமுகம் செய்த ஜிஎஸ்டி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைப் பாதிக்கின்றன. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் 'ஒரே வரி; குறைந்தபட்ச வரி' என ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை எளிமையாக்கப்படும்," என்று அவர் குறிப்பிட்டார்.
"விவசாயிகளுக்கு பாதகமாக வேளாண் சட்டத்திருத்த மசோதா உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் மூன்று வேளாண் சட்டங்களை நீக்குவோம். கடந்த காலங்களில் தமிழகம்தான் தொழில் துறை, உற்பத்தித் துறையில் சிறந்து விளங்கியது.
"தமிழகம் நாட்டிற்கே முன்னுதாரணமாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக அவ்வளவு பெருமை களையும் தமிழகம் தற்போது இழந்துகொண்டிருக்கிறது," என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
திருப்பூர் குமரன் நினைவிடத்தில் ராகுல் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் திருப்பூர் செல்லும் வழியில் அவிநாசிலிங்கம்பாளையம் பிரிவில் சாலையோரம் உள்ள ஒரு பேக்கரி முன் வாகனத்தை நிறுத்தச் சொல்லி ராகுல் கடைக்குள் சென்றார். அங்கு அமர்ந்து தேநீர் குடித்துக்கொண்டே கடைக்காரரிடம் பேசினார்.

