மாமல்லபுரத்தில் இரண்டு மாத கலாசார விழா தொடக்கம்

மாமல்லபுரத்தில் இரண்டு மாத கலாசார விழா தொடக்கம்

1 mins read
354cb766-5156-4ad5-9e12-b0f7164bf6d0
-

சென்னை: மாமல்­ல­பு­ரத்­தில் கலா­சார விழா மீண்­டும் தொடங்கியுள்ளது. ஆண்­டு­தோ­றும் ஜன­வரி, பிப்­ர­வரி மாதத்­தில் சுற்­றுலா துறை சார்­பில் அங்கு சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்­களில் உள்­நாட்டு சுற்­றுலா பய­ணி­களை மகிழ்­விக்­கும் வகை­யில் கலா­சார கலை­விழா நடத்­தப்­ப­டு­வது வழக்­கம்.

இவ்­வாண்­டுக்­கான வார இறுதி கலா­சார கலை விழா மாமல்­ல­பு­ரம் பூங்­கா­வில் உள்ள திறந்­த­வெளி மேடை­யில் நேற்று முன்­ தினம் தொடங்­கி­யது.

மாமல்­ல­பு­ரம் சுற்­றுலா அதி­காரி ச.ராஜா­ரா­மன் தலை­மை­யில் மாமல்­ல­பு­ரம் அர­சி­னர் சிற்­பக்­கலை கல்­லூரி முதல்­வர் ஜெ. ராஜேந்­தி­ரன் முன்­னி­லை­யில் செங்­கல்­பட்டு ஆர்.டி.ஓ. எஸ்.செல்­வம் குத்­து ­விளக்­கேற்றி கலா­சார கலை விழாவை தொடங்கி வைத்­தார்.

முதல் நாள் நிகழ்ச்­சி­யில் மீனாட்சி ராக­வன் குழு­வி­ன­ரின் பர­த­நாட்­டிய நிகழ்ச்­சி­யும் திரு­வண்­ணா­மலை மகேந்­தி­ரன் குழு­வி­ன­ரின் தப்­பாட்­டம், கிரா­மிய நடன நிகழ்ச்­சி­யும் நடந்­தது. நிகழ்ச்­சி­யில் மாமல்­ல­பு­ரம் சுற்­றுலா வழி­காட்­டி­கள் சங்க மூத்த தலை­வர் எம்.கே. சீனி­வா­சன், மாமல்­ல­பு­ரம் வரு­வாய் அலு­வ­லர் ஜேம்ஸ், கிராம நிர்­வாக அலு­வ­லர் வெங்­க­டே­சன் உட்­பட பலர் கலந்து கொண்­ட­னர். இவ்­விழா பிப்­ர­வரி 21ஆம் தேதி வரை நடை­பெ­றும்.