சிறப்பு புத்துணர்வு முகாமிற்கு அழைத்து வரப்படும் யானைகள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டுமே சிறப்பு முகாமிற்குள் செல்வதற்கு அனுமதிக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் தமிழக அரசின் சார்பில் யானைகளுக்குச் சிறப்பு புத்துணர்வு முகாம் நடத்தப்படுவது வழக்கம்.
ஆனால், கடந்த 2020ஆம் ஆண்டில் கொரோனா கிருமிப் பரவலின் காரணமாக யானைகளுக்கு இந்தச் சிறப்பு முகாம் நடத்தப்படவில்லை.
இந்நிலையில், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானி ஆற்றங்கரையோரம் யானை கள் புத்துணர்வு முகாமை நடத்து வதற்கு அனுமதி அளித்து அர சாணை வெளியிடப்பட்டுள்ளது.
யானைகளுக்குப் பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா பாதிப்பு இல்லையென்று சான்றிதழ் பெறவேண்டும். யானைப் பாகன்கள் உள்ளிட்ட பணியாளர்களும் 24 மணி நேரத்திற்கு முன்பாக கொரோனா பரிசோதனை சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
யானைகளை லாரிகளில் ஏற்று வதற்கு முன்பு லாரியை கிருமி நாசினியைக் கொண்டு சுத்தம் செய்யவேண்டும்.
லாரிகளில் ஏற மறுக்கும் யானைகளை வலுக்கட்டாயமாக அழைத்து வரக்கூடாது என்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள யானைகளை அழைத்து வரவேண்டாம் என்றும் இந்து சமய அறநிலையத்துறை சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

