இந்திய மாநிலங்கள் பலவற்றிலும் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வரும் நிலையில், தமிழகத்தில் மட்டும் இந்த வேகம் மந்த நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு போதிய அளவில் இல்லாதது, உயிர் பயம், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பக்கவிளைவுகள் ஏற்படலாம் எனப் பரவும் வதந்திகளை நம்புவது ஆகியவையே மக்கள் தடுப் பூசியைத் தவிர்ப்பதற்கான காரண மாகவும் சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் அதிகபட்சமாக கடந்த 18ஆம் தேதி மட்டும் 10,256 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டது.
அதைத்தொடர்ந்து தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் எண்ணிக் கையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதிகபட்சமாக 4,31,879 பேர் இந்த தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளனர்.
இதையடுத்து, கர்நாடகாவில் 3,07,752 பேரும் ராஜஸ்தானில் 2,73,866 பேரும் ஆந்திராவில் 1,77,856 பேரும் தெலுங்கானாவில் 1,57,831 பேரும் கேரளாவில் 1,35,832 பேரும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் 1 கோடியே 86 லட்சம் மக்களுக்குத் தடுப்பூசியைப் போடு வதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், தடுப்பூசி போடத் தொடங்கி நேற்றைய 14வது நாள் நிலவரப்படி 2,60,600 பேருக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுத்தும் தமிழகத்தில் 97,126 மருத்துவப் பணியாளர்களே தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு உள்ளனர். இது 37.27 விழுக்காடே ஆகும்.
மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.

