மருத்துவமனையிலிருந்து வெளியேறிய சசிகலா; அதிமுக கொடியுடன் காரில் பயணம்

மருத்துவமனையிலிருந்து வெளியேறிய சசிகலா; அதிமுக கொடியுடன் காரில் பயணம்

1 mins read
dacf801f-949d-45cd-adc5-437a8fcd4314
அதிமுக கொடி ஏற்றப்பட்ட காரில் சசிகலா பயணம் செய்ததால்அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். படம்: தமிழக ஊடகம் -

பெங்­க­ளூரு சிறை­யில் கடந்த நான்கு ஆண்­டு­க­ளாக இருந்த சசி­கலா கடந்த 27ஆம் தேதி விடு­தலை ஆனார்.

சிறை­யி­லி­ருந்து விடு­விக்க சில நாட்­களே ஆன நிலை­யில் அவ­ருக்கு கொரோனா பாதிப்பு ஏற்­பட்­ட­தால் பெங்­க­ளூரு விக்­டோ­ரியா அரசு மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டார். பத்து நாட்­க­ளுக்­கும் மேலாக கொரோ­னா­விற்குச் சிகிச்சை பெற்று வந்த நிலை­யில் உடல்­நிலை தேறி நேற்று அவர் மருத்­து­வ­மனை­யி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்­டார். அடுத்த சில நாட்­கள் வீட்­டுத் தனி­மை­யில் இருக்க மருத்­து­வர்­கள் அறி­வு­றுத்­தி­யுள்­ள­னர்.

இதை­யொட்டி ஒசூர் எல்­லை­யில் உள்ள தனி­யார் நட்­சத்­திர விடு­தி­யில் தங்கி சில நாட்­கள் சசிகலா ஓய்­வெ­டுப்­பார் என்று தெரி­கிறது. இத­ன் பிறகு அவர் தமி­ழ­கம் திரும்­பு­வார் என எதிர்­பார்க்­கப்­ப­டுகிறது. சசி­க­லாவை அழைத்­துச் செல்ல அம­முக பொதுச் செய­லா­ளர் டிடிவி தின­க­ரன், விவேக் மற்­றும் உற­வி­னர்­கள், வழக்­க­றி­ஞர்­கள் மருத்­து­வ­மனை வளா­கத்­திற்கு வந்­தி­ருந்­த­னர். மருத்­து­வ­ம­னை­யில் இருந்து வெளியே வந்த சசி­கலா அதி­முக கொடி ஏற்­றப்­பட்ட காரில் பய­ணம் செய்­த­தால் தமி­ழக அர­சி­யல் வட்­டா­ரத்­தில் மிகுந்த பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.

இதற்கிடையே அமமுக பொதுச் செயலாளர் தினகரன், "அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற முறையில் சசிகலா சென்ற காரில் அதிமுக கொடி இருக்கிறது. ஜனநாயக முறைப்படி அதிமுகவை மீட்டு டெடுக்கும் பணி தொடரும்," என்று கூறியுள்ளார்.