விழுப்புரம்: பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் இருந்து நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டார் வி.கே.சசிகலா.
அவர் ஏறிச்சென்ற கார் ஜெயலலிதா உபயோகப்படுத்திய கார் என்றும் அந்தக் காரில் அதிமுக கொடி பறந்தது குறித்தும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஒருபக்கம், சட்ட அமைச்சர் சிவி சண்முகம், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி மறுபக்கம் என அடுத்தடுத்து செய்தியாளர்களைச் சந்தித்து அரசியல் களத்தை சூடேற்றி வருகின்றனர்.
விழுப்புரத்தில் செய்தியாளர் களிடம் பேசிய சட்டத்துறை அமைச் சர் சி.வி.சண்முகம், “அதிமுக கொடி, இரட்டை இலை சின்னத்தை சசிகலா பயன்படுத்தக்கூடாது,” என்று வலியுறுத்தி உள்ளவர், “அதிமுக கொடியைச் சட்டவிரோத மாகப் பயன்படுத்தி உள்ள சசிகலா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம்,” என்றார்.
இந்நிைலயில், வழக்கறிஞர் களுடன் சசிகலா கலந்தாலோசித்த பிறகே காரில் அதிமுக கொடி கட்டப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
“கைதாகும்போது அதிமுகவின் பொதுச்செயலாளராகத்தான் இருந்தீர்கள். அதனால் அதிமுக கொடியுடன் போனால்தான் தொண்டர்களும் பல மடங்கு உற்சாகமாவார்கள்” என்றும் சொல்லியுள்ளனர்.
“பொதுச் செயலாளரை யாரும் நீக்கமுடியாது. சசிகலாதான் பொதுச் செயலாளராக இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கிறார்,” என்று டிடிவி தினகரன் சொன்னதும் இதை மனதில் வைத்துதான் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
இதற்கிடையே, சசிகலா காரில் அதிமுக கொடி கட்டப்பட்டதை சட்ட மீறலாகத்தான் கருதமுடியும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறு கையில், “சசிகலா காரில் அதிமுக கொடிகட்டப்பட்டிருப்பது ஏற்கமுடியாதது. அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லாதவர் எப்படி கட்சிக் கொடியைப் பயன்படுத்த முடியும்.
“அவருக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது,” என்றார்.
“டிடிவி தினகரன் தனிப்பட்ட முறையில் அரசியல் நடத்துவதற்காக தொடங்கப்பட்ட கட்சிதான் அமமுக. அதை அதிமுகவுடன் இணைக்கும் வாய்ப்புக்கே இடமில்லை. ஆனால், டிடிவி தினகரன், தான் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கடிதம் அளித்தால் அவரை அதிமுகவில் இணைக்க தலைமை பரிசீலனை செய்யும்.
“அப்படியும் அவர் அதிமுகவில் ஏற்றுக்கொள்ள தகுதி இல்லாதவர் என தலைமை முடிவு செய்தால் அவரது கடிதம் குப்பைத் தொட்டிக்கு சென்றுவிடும்,” என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி கூறியுள்ளார்.
பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட வி.கே.சசிகலாவைக் காண ஏராளமான ஆதர வாளர்கள் மருத்துவமனை வாயிலில் காத்திருந்தனர். சிலர் கையில் பதாகை களையும் பிடித்திருந் தனர். அவர்கள் சசிகலா வாழ்க என உற்சாக முழக்கமிட்டு வாழ்த்தினர்.