கள்ளக்குறிச்சி: ஆங்காங்கே நடைபெற்று வரும் பரோட்டா, மாம்பழம் தின்னும் போட்டியைப் போல கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் பிரியாணி உண்ணும் போட்டி நடைபெற்றது.
10 நிமிடத்தில் ஒரு கிலோ பிரியாணியைச் சாப்பிடுபவர்களுக்கு தங்கம், வெள்ளிக் காசுகள் பரிசாக வழங்கப்பட உள்ளதாக ‘ஈட்டிங் சேலஞ்ச் பாய்ஸ்’ என்ற அமைப்பினர் அறிவித்திருந்தனர்.
இதையடுத்து, ஏராளமான பிரியாணி பிரியர்கள் இப்போட்டியில் பங்கெடுக்கத் திரண்டனர்.
இவர்களில், கள்ளக்குறிச்சி அருகேயுள்ள உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ற 21 வயது இளையர் நான்கரை நிமிடத்துக்குள் ஒரு கிலோ பிரியாணியைச் சாப்பிட்டு மற்றவர்களை அசரவைத்தார்.
இந்நிலையில், ராமகிருஷ்ண னுக்கு ஒரு கிராம் தங்கக் காசும் பதக்கமும் பரிசளிக்கப்பட்டது.
இரண்டாம் பரிசாக 10 கிராம் வெள்ளிக் காசு, மூன்றாம் பரிசாக ஐந்து கிராம் வெள்ளிக் காசு என போட்டியில் அடுத்தடுத்து வென்ற இளைஞர்களுக்கு வழங்கப்பட்டது.
ஆனால், இதுபோன்ற போட்டியில் கலந்துகொள்வது குறித்து உணவுக் குழாய் மற்றும் இரைப்பை, குடல் அறுவை சிகிச்சை மருத்துவர் ஆனந்த் எச்சரித்துள்ளார்.
“உண்மையிலேயே இதுபோன்ற உணவுப் போட்டிகளில் கலந்து கொள்வது என்பது விஷப் பரிட்சை தான்.
“சாப்பிடுவதற்கென சில முறைகள் இருக்கின்றன. பொறுமை யாக மென்று சாப்பிட்டால்தான் அந்த உணவு எந்தச் சிக்கலும் இன்றி இரைப்பைக்குச் செல்லும். வேகவேகமாக உணவை விழுங்கும் போது உணவுக் குழாயின் ஓட்டமும் நாம் உணவு விழுங்கும் வேகமும் ஒருசேர இல்லாமல் போகும். இந்த சூழலில் உணவுக்குழாய் வெடிப்பதற் கான வாய்ப்புள்ளது.
“வேக வேகமாக உணவை உண்ணும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழப்பதற்கான சூழலும் உள்ளது,” என்று மருத்துவர் ஆனந்த் கூறியுள்ளார்.
10 நிமிடத்தில் ஒரு கிலோ பிரியாணியை உண்ணும் போட்டி நடந்தது.
வலது படம்: போட்டியில் கலந்து கொண்டு ஒரு கிராம் தங்கக் காசு, வெற்றிப் பதக்கத்தைத் தட்டிச் சென்ற
இளையர்
ராமகிருஷ்ணன்.
படம்: ஊடகம்