தமிழிசை: ரஜினிக்குப் பிறகு 'பரட்டை'யாக அதிகம் பெயர் வாங்கியது நான்தான்

தமிழிசை: ரஜினிக்குப் பிறகு 'பரட்டை'யாக அதிகம் பெயர் வாங்கியது நான்தான்

2 mins read
f15f5193-b536-4d28-a673-47e8aa555ad5
-

சென்னை: எப்­போது பார்த்­தா­லும் என்னை 'மீம்ஸ்'களில் பரட்டை பரட்டை என்று போடு­கி­றார்­கள். '16 வய­தி­னிலே' படத்­தில் நடித்­தி­ருந்த ரஜி­னிக்­குப் பிறகு 'பரட்டை' என மக்­க­ளி­டம் அதிகம் பெயர் வாங்­கி­யது நான்­தான் என நினைப்பதாக தெலுங்­கானா மாநில ஆளு­நர் தமி­ழிசை செளந்­த­ர­ரா­ஜன் நகைச்­சு­வை­யு­டன் குறிப்­பிட்­டுள்­ளார்.

நேற்று சென்­னை­யில் நடந்த பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்­பில் அவர் பேசுகையில், "பரட்டை தலைக்­காரி, கறுப்பு நிறம் என்றெல்லாம் என்­னைப் பலரும் விமர்­சித்­துள்­ள­னர்.

"என் தலை­முடி சுருட்டை என்­றா­லும் நான் யாரு­டைய பணத்­தை­யும் சுருட்­டி­யது இல்லை. அதே­போல் நான் கறுப்பு நிற­ம்தான், எனினும் என் கையில் கறுப்­புப் பண­மில்லை," என்று கூறினார்.

தன்னை அடிக்­கடி 'மீம்ஸ்'களில் கலாய்ப்­பது குறித்து அவர் பேசிய போது, "ஒரு­முறை நான் விமா னத்­தில் செல்­லும்­போது அரு­கில் அமர்ந்­தி­ருந்த சகோ­த­ரர் ஒரு­வர் தன்னை 'மீம்ஸ் போடு­ப­வர்' என்று அறி­மு­கப்­ப­டுத்­திக்­கொண்­டார்.

"உடனே நான், எல்லோரும் ஏன் என்னை மட்­டும் 'மீம்ஸ்' போடுகிறீர்கள்? வேறு யாரும் கறுப்பா, குள்­ளமா, சுருட்டை முடி யுடன் இல்­லையா?'' என்றேன்.

"அக்கா உங்­களை 'மீம்ஸ்' போட்­டால்­தான் அதி­கம் பேர் பார்க்­கி­றார்­கள். அதிக 'வியூஸ்' வந்­தால்தான் வரு­மா­னம் வரும்," என்­றார். விமா­னத்­தில் இருந்து இறங்­கும்­போது "அக்கா மன்­னிச்­சி­டுங்க. இனி­மேல் உங்­களை 'மீம்ஸ்' போட­மாட்­டேன்," என்­றார்.

ஆனால், நானோ "எனக்கு அவ­மா­னம் வரு­கிறது என்­றா­லும் உங்­க­ளுக்கு வரு­மா­னம் வரு­கிறது என்­றால் நீங்­கள் தொட­ருங்­கள். என்­னால் யாருக்­கா­வது உதவி, வரு மானம் கிடைத்தால் அதில் எனக்கு மகிழ்ச்சியே என்றேன்," என்­றார்.