தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டி யிட உள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் புதிய தகவலை தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்கே நகர், தேனி மாவட்டத்தில் ஒரு தொகுதி என இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறினார்.
தேனி மாவட்டத்தில் ஒரு தொகுதியில் போட்டியிடப் போவ தாகக் கூறிய தினகரன் அது எந்த தொகுதி என்பதைக் கூறவில்லை.
தேனி மாவட்டத்தில் அவர் எம்பியாகத் தேர்வான பெரியகுளம் தற்போது தனித்தொகுதியாக உள்ளது. இதையடுத்து, கம்பம், போடி அல்லது ஆண்டிபட்டியில் போட்டியிடலாம் எனத் தெரிகிறது.
ஆனால் டிடிவி தினகரன் ஜெயலலிதா வெற்றிபெற்ற ஆண்டி பட்டி தொகுதியில் போட்டியிடவே அதிக வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
ஏனெனில், போடி தொகுதியில் ஓ பன்னீர்செல்வம் மீண்டும் போட்டியிடுவார் என்பதால் அங்கு இரு பெரும் தலைகள் போட்டியிடும் வாய்ப்பு இல்லை. அதேவேளையில், டிடிவி தினகரன் ஆண்டிபட்டியில் நின்றால் திமுகவிற்கு போன தங்க தமிழ்செல்வன் கடும் போட்டியைச் சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது.