முதல்வரின் தேர்தல் வாக்குறுதிகளைக் கடுமையாக விமர்சித்து வருகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
நேற்று கடலூரில் பேசிய ஸ்டாலின், "ஸ்டாலின் சொல்கிறார், முதல்வர் பழனிசாமி செய்கிறார். ஆண்டவன் சொல்றான், அருணாச் சலம் முடிக்கிறான்," என்ற ரஜினியின் வசனத்தைக் கூறி தொண்டர்களைச் சிரிக்க வைத்தார்.
"திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும்," என்று நான் முன்பு கூறியிருந்தேன். அதன்படி முதல்வர் பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்துவிட்டார் என்று ஸ்டாலின் விமர்சித்திருந்தார்.
இதேபோல் திமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என ஸ்டாலின் இப்போது அறிவித்துள்ளார். இதையடுத்து, மாணவர்கள் பெற்ற கல்விக் கடனையும் தேர்தலுக்கு முன்பாக முதல்வர் தள்ளுபடி செய்வாரா என்றும் ஸ்டாலின் கேட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் குறைகளைக் கண்டுபிடிக்க பூதக்கண்ணாடி தேவையில்லை. கண்ணை மூடிக்கொண்டு இருந்தாலே கண்டுபிடித்துவிடலாம் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

