சாத்தூர் அருகே பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் ஒரு பள்ளி மாணவி, திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண், ஏழு மாத கர்ப்பிணிப் பெண் உட்பட 19 பேர் உயிரிழந்தனர்.
கர்ப்பிணிப் பெண் பணியில் சேர்ந்து மூன்று நாட்களே ஆகியிருந்த நிலையில், உயிரிழந்திருப்பது மக்களை பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளம் கிராமத்தில் வெள்ளியன்று இந்தச் சம்பவம் நேர்ந்தது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 30 பேர் சாத்தூர், சிவகாசி, கோவில்பட்டி, மதுரை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பலருக்கும் 80% மேல் தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதி கரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதையடுத்து, பட்டாசு ஆலை உரிமையாளர், குத்தகைதாரர் உட்பட அறுவரிடம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து தொடர்பாக விசாரணை நடத்த ஐந்து தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
சந்தனமாரி என்பவருக்குச் சொந்தமான மாரியம்மாள் பட்டாசு ஆலையில் உள்ள 30 அறைகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணி புரிந்து வந்தனர்.
இந்த ஆலையில் 'பேன்சி' ரக வெடிகள் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், வழக்கம்போல் தொழி லாளர்கள் பட்டாசுகளில் மருந்தை நிரப்பும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, உராய்வு காரணமாக தீவிபத்து ஏற்பட்டு அங்கிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின.
இதையடுத்து, அடுத்தடுத்த அறைகளிலும் மளமளவென தீ பரவி, பட்டாசுகள் பயங்கரமாக வெடித்ததில் 15க்கும் மேற்பட்ட அறைகள் இடிந்து தரைமட்டமாகின.
வேம்பக்கோட்டை, சாத்தூர், சிவகாசிையச் சேர்ந்த தீயணைப்புத்துறையினர் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்குத் தலா ரூ.3 லட்சமும் பலத்த காயமடைந்தவர்களுக்குத் தலா ஒரு லட்சம் ரூபாயும் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதேபோல் பிரதமர் மோடியும் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும் படுகாயம் அடைந்தோருக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, இந்த விவகா ரத்தில் முறையாக விசாரணை நடத்தி, விதிமீறலில் ஈடுபடுபட்ட வர்கள் மீது தமிழக அரசு நட வடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.

