ஆசியாவின் மிகப்பெரிய முருகன் சிலை சொர்ணமலையில் அமைகிறது

ஆசியாவிலேயே மிகப்பெரிய முருகன் சிலை கோயில்பட்டி அருகே உள்ள சொர்ணமலையில் அமைய உள்ளது. இம்மலை மீது கதிர்வேல் முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலுக்கு அருகே 135 அடி உயரமுள்ள முருகன் சிலையை அமைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மலேசியாவின் பத்துமலை பகுதியில் அமைந்துள்ள பிரம்மாண்ட முருகன் சிலை 108 அடி உயரமாகும்.

அச்சிலையை வடிவமைத்த திருவாரூரைச் சேர்ந்த சிற்பி தியாகராஜன் குழுவினர்தான் சொர்மணலை முருகன் சிலையையும் உருவாக்க உள்ளனர்.

இப்புதிய சிலை 123 அடியாகவும் அதற்கான பீடம் 12 அடியாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டமிட்டபடி நிறுவப்பட்டால் ஆசியாவில் மிகப்பெரிய முருகன் சிலையாக இது இருக்கும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!