சென்னை: சுகாதாரப் பணியாளர்கள் எதிர்பார்த்த அளவு தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரவில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதனால் ஆறு விழுக்காடு தடுப்பூசிகள் வீணாகிவிட்டதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.
"நாள்தோறும் பத்துப் பேருக்கு தடுப்பூசி போடத் திட்டமிடும்போது, அவர்களில் இரண்டு பேர் வராவிட்டால் அவர்களுக்கான மருந்து வீணாகிவிடும். குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு அதைப் பயன்படுத்த முடியாது.
"இப்படி ஆறு விழுக்காடு தடுப்பூசி மருந்துகள் வீணாகின்றன. சுகாதாரப் பணியாளர்கள் தங்களுக்குள்ள வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்," என ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.
மாநிலம் முழுவதும் இதுவரை 240,000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.