6% தடுப்பூசி வீணாகிறது

6% தடுப்பூசி வீணாகிறது

1 mins read

சென்னை: சுகா­தா­ரப் பணி­யா­ளர்­கள் எதிர்­பார்த்த அளவு தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள முன்­வ­ர­வில்லை என்­று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறி­யுள்­ளார்.

இத­னால் ஆறு விழுக்­காடு தடுப்­பூ­சி­கள் வீணாகிவிட்­ட­தாக அவர் கவலை தெரி­வித்­துள்­ளார்.

"நாள்­தோ­றும் பத்துப் பேருக்கு தடுப்­பூசி போடத் திட்­ட­மி­டும்­போது, அவர்­களில் இரண்டு பேர் வரா­விட்­டால் அவர்­க­ளுக்­கான மருந்து வீணா­கி­வி­டும். குறிப்­பிட்ட நேரத்துக்­குப் பிறகு அதைப் பயன்­படுத்த முடி­யாது.

"இப்­படி ஆறு விழுக்­காடு தடுப்­பூசி மருந்­து­கள் வீணா­கின்­றன. சுகா­தா­ரப் பணி­யா­ளர்­கள் தங்­க­ளுக்­குள்ள வாய்ப்­பைப் பயன்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும்," என ராதா­­கி­ருஷ்­ணன் வலி­யு­றுத்தி உள்ளார்.

மாநி­லம் முழு­வ­தும் இது­வரை 240,000 பேருக்கு தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ள­தாக சுகா­தா­ரத் துறை தெரி­வித்­துள்­ளது.