இருமுறை எம்எல்ஏவாக இருந்தவர் வசிக்க இலவச வீடு கேட்டு தமிழக அரசிடம் மனு

இருமுறை எம்எல்ஏவாக இருந்தவர் வசிக்க இலவச வீடு கேட்டு தமிழக அரசிடம் மனு

1 mins read
26ce5546-00ca-419a-bed5-b37ad67d236d
இருமுறை எம்எல்ஏவாக இருந்த நன்மாறன் இன்றும் வாடகை வீட்டில் குடியிருந்து வரும் நிலையில், இலவச வீடு கேட்டு தனது மனைவி சண்முகவள்ளியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் சென்று மனு அளித்தார். படம்: ஊடகம் -

இரண்டு முறை எம்­எல்ஏ வாக இருந்த நன்­மா­றன் என்­ப­வர், தற்­போது வாடகை வீட்­டில் வசித்து வரு­கி­றார்.

வயது மூப்பு, வறுமை கார­ண­மாக சிரமப்பட்டு வரும் தனக்­கும் தன் மனை­விக்­கும் ஏழை மக்களுக்கு வழங்­கு­வ­தைப் போலவே இல­வச வீடு ஒன்றை வழங்­கக் கோரி மது­ரை­யில் டிஆர்ஓ செந்­தில்குமா­ரி­யி­டம் அவர் மனு அளித்­துள்­ளார்.

குடிைச மாற்று வாரி­யம் சார்­பில் ராஜாக்­கூ­ரில் கட்­டப்­பட்­டுள்­ள வீடு­களில் ஒன்­றைத் தங்­க­ளுக்குத் தரு­மாறு மார்க்­சிஸ்ட் மாவட்டக் குழு உறுப்­பி­ன­ரான நன்­மா­றன், 72, செந்­தில்குமா­ரி­யி­டம் மனு அளித்­தார்.

மேடை கலை­வா­ணர் என்ற அடைமொ­ழி­யு­டன் தமி­ழ­கத்­தில் அறி­யப்­பட்ட நன்­மா­றன், எம்­எல்ஏ சம்­ப­ளம், ஓய்­வூ­தி­யத்தைக் கட்­சி­யின் விதி­கள்­படி கட்சியே எடுத்­துக்கொள்ள ஒப்­புக்­கொண்­டார்.

இதையடுத்து, கட்சி வழங்­கும் சொற்ப சம்­ப­ளத்­தில் குடும்­பத்தை நடத்தி வருகிறார்.

மகன்­கள் குண­சே­க­ரன், ராஜ சேக­ரன் திரு­ம­ண­மாகி தனி­யாக வசிக்­கின்­ற­னர். நன்மாறன் தனது மனை­வி­யுடன் மேலப்­பொன்­ன­க­ரம் பிராட்­வே­யில் வாடகை வீட்­டில் வசித்து வரு­கி­றார்.

நன்­மா­றன் கூறு­கை­யில், "ஏழை மக்­க­ளுக்கு வழங்­கு­வது போன்று தமிழக அரசு எனக்கும் குடி­யி­ருக்க ராஜாக்­கூ­ரில் தரை­தளத்­தில் ஒரு வீடு ஒதுக்­கித் தரும்­படி மனு கொடுத்துள்ளேன்,'' என்­றார்.