சாக்குமூட்டையில் அழுகிய நிலையில் பாட்டி, பேத்தி உடல்கள் மீட்பு; நால்வர் கைது

தென்­கா­சி­யில் கடந்த 45 நாட்­க­ளாக சுவ­ரொட்டி ஒட்டி தேடப்­பட்டு வந்த ஒரு ஒன்­றரை வயது குழந்­தை­யும் அதன் பாட்­டி­யும் சாக்­கு­மூட்­டைக்­குள் அழு­கிய நிலை­யில் சட­ல­மாக மீட்­கப்பட்­டுள்­ள­னர்.

வட்­டிக்கு கொடுத்த கடன் பணத்தை திருப்­பிக்கேட்டு தொந்தரவு கொடுத்த­தால், பேத்தி­ சாக்‌ஷியை­யும் பாட்­டி­ கோமதி அம்­மாளை­யும் நால்­வர் கொலை செய்து முட்­பு­த­ரில் வீசி­யது போலிஸ் விசா ரணையில் தெரியவந்தது.

நெஞ்சைப் பத­ற­வைக்­கும் இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில், வீர­பாண்டி அம்­மாள், செல்­லப்பா, மகேஸ்­வரி, பூதத்­தான் ஆகிய நால்­வர் கைதாகி உள்­ள­னர்.

தென்­காசி, கீழப்­பு­லி­யூ­ரைச் சேர்ந்­த­வர் கோமதி அம்­மாள், 55.

தென்­காசி அருகே உள்ள வேட்­டைக்­கா­ரன்­கு­ளத்­தைச் சேர்ந்தவர் வீர­பாண்டி அம்­மா­ள், 55. இவர் கோமதி அம்­மா­ளி­டம் ரூ.20,000 கடன் வாங்கி உள்­ளார். அச­லுக்­கு­மேல் வட்டி கட்­டிய பிற­கும் வீர­பாண்டி அம்­மா­ளி­டம் பணத்தைத் திருப்பித் தரு­மாறு கோமதி அம்­மாள் அடிக்­கடி தொல்லை கொடுத்து வந்த­தாகவும் கூறப்­ப­டு­கிறது.

விசாரணை தொடர்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!