தமிழக அரசின் இடைக்கால வரவுசெலவுத் திட்டம் தாக்கல்

தமிழக அரசின் இடைக்கால வரவுசெலவுத் திட்டம் தாக்கல்

2 mins read
26aac219-ccf4-4bc8-b221-a85a5a2e778b
சட்டப் பேரவையில் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்து பேசுகிறார் துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம். படம்: தமிழக ஊடகம் -

சென்னை: தமி­ழக இடைக்­கால வரவு செல­வுத் திட்­டத்தை நேற்று காலை துணை முதல்­வ­ரும் நிதி அமைச்­ச­ரு­மான ஓ. பன்­னீர்­செல்­வம் சட்­டப்­பே­ர­வை­யில் தாக்­கல் செய்­தார்.

சென்னை திரு­வல்­லிக்­கே­ணி­யில் உள்ள விநா­ய­கர் கோயி­லில் சாமி தரி­ச­னம் செய்­த­பின்­னர், 11வது முறை­யாக வரவு செல­வுத் திட்­டத்தை நிதியமைச்­சர் தாக்­கல் செய்­தார்.

அப்­போது பேசிய அவர், பள்­ளிக்­கல்­வித் துறைக்கு ஏறக்குறைய ரூ.34,181 கோடி ஒதுக்­கீடு, காவல்­து­றையை நவீ­ன­ம­யப்­ப­டுத்­தும் வகை­யில் ரூ.100 கோடி ஒதுக்­கீடு செய்­யப்பட்­டுள்­ள­தாக அறி­வித்த நிதி­யமைச்­சர், பெட்­ரோல், டீசல் மீதான 'செஸ்' வரி­யைக் குறைக்க வும் மத்­திய அர­சுக்கு கோரிக்கை விடுத்­தார்.

கோவையில் ரூ.6,683 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் 44 கிலோ மீட்டர் வரை அமைக்கப் படும் என்றும் சொன்னவர், திரு­மண நிதி­யு­தவித் திட்­டங்களின்கீழ் கடந்த 10 ஆண்­டு­களில் 12.50 லட்­சம் பேருக்கு ரூ.1,791 கோடி­யில் தங்­கம் வழங்­கப்­பட்­டுள்­ளது என்­றும் திரு­மண உத­வித் திட்­டத்­தின் கீழ் ரூ.4,371 கோடி நிதி­யு­தவி வழங்­கப்­பட்­டுள்­ளது என்­றும் தெரி­வித்­துள்­ளார்.

•கொரோனா முறியடிப்புக்கு ரூ.13,352 கோடி செலவு

•வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத் தலைவர் விபத்தில் உயிரிழந்தால் ரூ.4 லட்சம் காப்பீட்டுத் தொகை

• குடும்பத் தலைவர் இயற்கை யாக உயிரிழந்தால் ரூ.2 லட்சம் காப்பீட்டுத் தொகை

• பயிர்க் கடன் தள்ளுபடிக்கு ரூ.5000 கோடி ஒதுக்கீடு

• புதிய பேருந்துகள் வாங்க ரூ.623 கோடி ஒதுக்கீடு

• வேளாண்துறைக்கு ரூ.11,982 கோடி, மீன்வளத் துறைக்கு ரூ.580.97 கோடி ஒதுக்கீடு

•40 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க ரூ.3,016 கோடி ஒதுக்கீடு

•வீடு இல்லாதவர்களுக்கு 2 சென்ட் நிலத்துடன் வீடு