மதுரை மாவட்டம் பொய்கைக்கரைப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் பாலுச்சாமி, 33, கடந்த புதன்கிழமை சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி மரணமடைந்தார்.
இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படையின் நக்சல் தடுப்புப் பிரிவில் 14 ஆண்டுகளாக பணியாற்றிவந்த இவருக்கு ஈராண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
ராமலட்சுமி, 26, என்ற மனைவியும் 2 வயது குழந்தையும் உள்ளனர்.
பாலுசாமியின் உடல் நேற்று முன்தினம் அவரது சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டது.
கிராமத்தினரும் அதிகாரிகளும் அஞ்சலி செலுத் திய பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட அவரது உடல், ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.