கன்னியாகுமரி மாவட்டம், நாகர் கோவிலைச் சேர்ந்த கண்ணன் என்ற இளைஞர் 270 கிலோ எடையுள்ள இரண்டு மோட்டார் சைக்கிள்களை தனது தோளில் 42 கி.மீ. தூரத்துக்கு தூக்கிச்சென்று சாதனை செய்துள்ளார்.
'இரும்பு மனிதர்' என்ற பட்டம் பெற்றுள்ள இவர், ஏற்கெனவே பல டன் எடையுள்ள லாரியை கயிற்றால் கட்டி இழுத்துச் சென்று உலகச் சாதனை புரிந்துள்ளார். இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்ட உடல் பளு தூக்கும் சங்கம் சார்பில், நாகர்கோவில் இந்து கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற சாதனையை ஏராளமானோர் கண்டு ரசித்து பாராட்டினார்கள். கண்ணனின் இச்சாதனை 'புக் ஆஃப் ரெக்கார்டு' என்ற உலகச் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.
படம்: தமிழக ஊடகம்