திருப்பூர்: திருப்பூரில் காரில் கயிற்றைக் கட்டி ஏடிஎம் இயந்திரத்தை பெயர்த்து எடுத்துச் சென்ற கொள்ைளச் சம்பவம் தொடர்பாக வட மாநிலத்தைச் சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த ஆறு கொள்ளையர்களிடம் இருந்தும் கைத்துப்பாக்கிகள், ஒன்பது தோட்டாக்கள், ரூ.69,000 ெராக்கம், எரிவாயுத் தோம்பு உள்ளிட்டவற்றை போலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.
திருப்பூர்-ஊத்துக்குளி சாலை, கூலிப்பாளையம் நால்ரோடு சந்திப்பில், பாங்க ஆப் பரோடா வங்கியின் ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஞாயிறன்று இந்த ஏடிஎம் இயந்திரத்தை காரில் கயிறு கட்டி பெயர்த்துச் சென்றனர். ஏ.டி.எம்.மில் ஒரு லட்சத்து 100 ரூபாய் இருந்தது.
திருட்டுக்குப் பயன்படுத்திய கார், சரக்கு வாகனம், ெபயர்த்து எடுத்துச் செல்லப்பட்ட ஏடிஎம் இயந்திரத்தின் உடைந்த பாகங்கள் உள்ளிட்டவை ஈரோடு மாவட் டத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக கருங்கல்பாளையம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக தங்கியிருந்த சிலரைப் பிடித்து விசாரித்ததில், அவர்கள் ஏடிஎம் இயந்திரத்தைக் கொள்ளை யடித்ததை ஒப்புக்கொண்டனர்.
இவர்கள் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ராகுல், ரபீக், ஷாகித், ஷாஜித், இர்சாத், காசிம்கான் என்பது தெரியவந்தது.