தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஏடிஎம் இயந்திரம் திருட்டு: ஆறு கொள்ளையர்கள் கைது

1 mins read
173ba0b1-62a5-4f46-a444-139bc6d27dab
கைதான வட மாநில இளைஞர்கள். படம்: தமிழக ஊடகம் -

திருப்­பூர்: திருப்­பூ­ரில் காரில் கயிற்­றைக் கட்டி ஏடி­எம் இயந்­தி­ரத்தை பெயர்த்து எடுத்­துச் சென்ற கொள்ைளச் சம்­ப­வம் தொடர்­பாக வட மாநி­லத்­தைச் சேர்ந்த ஆறு பேர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

இந்த ஆறு கொள்­ளை­யர்­க­ளி­டம் இருந்­தும் கைத்­துப்­பாக்­கி­கள், ஒன்­பது தோட்­டாக்­கள், ரூ.69,000 ெராக்­கம், எரி­வா­யுத் தோம்பு உள்­ளிட்­ட­வற்றை போலி­சார் பறி­மு­தல் செய்­துள்­ள­னர்.

திருப்­பூர்-ஊத்­துக்­குளி சாலை, கூலிப்­பா­ளை­யம் நால்­ரோடு சந்­திப்­பில், பாங்க ஆப் பரோடா வங்­கி­யின் ஏடி­எம் செயல்­பட்டு வரு­கிறது. கடந்த ஞாயி­றன்று இந்த ஏடி­எம் இயந்­தி­ரத்தை காரில் கயிறு கட்டி பெயர்த்­துச் சென்­ற­னர். ஏ.டி.எம்.மில் ஒரு லட்­சத்து 100 ரூபாய் இருந்­தது.

திருட்­டுக்­குப் பயன்­ப­டுத்­திய கார், சரக்கு வாக­னம், ெபயர்த்து எடுத்­துச் செல்­லப்­பட்ட ஏடி­எம் இயந்­தி­ரத்­தின் உடைந்த பாகங்­கள் உள்­ளிட்­டவை ஈரோடு மாவட் டத்­தில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன.

இந்த சம்­ப­வம் தொடர்­பாக கருங்­கல்­பா­ளை­யம் பகு­தி­யில் சந்­தே­கத்­திற்கு இட­ம­ளிக்­கும் வித­மாக தங்­கி­யி­ருந்த சில­ரைப் பிடித்து விசா­ரித்­த­தில், அவர்­கள் ஏடி­எம் இயந்­தி­ரத்­தைக் கொள்ளை யடித்­ததை ஒப்­புக்­கொண்­ட­னர்.

இவர்கள் ஹரி­யானா மாநி­லத்­தைச் சேர்ந்த ராகுல், ரபீக், ஷாகித், ஷாஜித், இர்­சாத், காசிம்­கான் என்பது தெரியவந்தது.