மாற்றுத் திறனாளி இளைஞருக்கு தனது செலவில் பைக் வாங்கிக்கொடுத்த ஆட்சியர்

மதுரை: மாற்­றுத் திற­னாளி இளைஞர் ஒரு­வ­ருக்குத் தனது சொந்த செல­வில் இரு சக்­கர வாக­னத்தை வாங்­கிக்­கொ­டுத்­துள்ள மதுரை மாவட்ட ஆட்­சி­யர் அன்­ப­ழ­க­னின் மனி­தா­பி­மான செயல் பல­ரது பாராட்­டு­க­ளைப் பெற்று வரு­கிறது.

இத­னால், கடந்த 21 ஆண்டு களா­க தான் எங்கு சென்­றா­லும் தனது மக­னை­யும் இடுப்­பில் சுமந்து சென்­று­கொண்­டி­ருந்த தாயின் பெரும் பாரம் கீேழ இறக்­கி­வைக்­கப்பட்­டுள்­ளது.

மதுரை ஆனை­யூ­ரைச் சேர்ந்த காளி­முத்து - மாரீஸ்­வரி தம்­ப­திக்கு 21 வய­தில் பழ­னி­கு­மார் என்ற மகன் உள்­ளார். இவர் பிற­வி­லேயே வாய் பேச முடி­யாத, நடக்­க­மு­டி­யாத மாற்­றுத் திற­னாளி.

பெற்­றோர் தங்­க­ளது சொற்ப சம்­ப­ளத்­தில் மகனை வளர்ந்து வந்­த­னர்.

இந்­நி­லை­யில், மாரீஸ்­வரி ரத்த புற்­று­நோ­யால் பாதிக்­கப்­பட, காளி முத்­துவும் போதைக்கு அடி­மை­யா­னார். இத­னால், மகனை யாரை நம்­பி­யும் விட்­டுச் செல்­லா­மல் எங்கு சென்­றா­லும் மக­னை­யும் மாரீஸ்­வரி தூக்­கிச் செல்­வார்.

தான் நோய்­வாய்ப்­பட்­டுள்­ள­தால் மகனை தூக்­கிச்­செல்ல முடி­யா­மல் பெரும் அவ­திப்­ப­டு­வ­தா­க­வும் இந்த சிர­மத்தைப் போக்க இரு சக்­கர வாக­னம் வழங்­கி­னால் தனக்கு பேரு­த­வி­யாக இருக்­கும் என்­றும் ஆட்­சி­யர் அன்­ப­ழ­க­னி­டம் மாரீஸ்­வரி மனு அளித்­தார்.

இதை­ய­றிந்த ஆட்­சி­யர் தனது சொந்த செல­வில் இரு சக்­கர வாக­னம் வாங்கி, அதில் காரில் உள்­ளது­போல் இடை­வா­ரு­டன் இருக்­கையை பிரத்­தியே­க­மாக வடிவ மைத்து அந்த வாக­னத்தை நேற்று ஆட்­சி­யர் வழங்­கி­னார்.

மகனை இடுப்பில் தூக்கிக் கொண்டு வந்து மனு அளித்த புற்றுநோய் பாதிப்புக்குள்ளான தாய்க்கு உதவும் வகையில், 21 ஆண்டு சுமைக்கு ஓய்வளித்து உத விய ஆட்சியரை வலைத்தள வாசிகள் பாராட்டி வருகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!