தேர்தல் அதிகாரி: வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுக்கு வாய்ப்பில்லை

தேர்தல் அதிகாரி: வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுக்கு வாய்ப்பில்லை

2 mins read

சென்னை: "வாக்­குப்­ப­திவு இயந்­தி­ரங்­களில் எந்­த­வித முறை­கே­டும் செய்ய முடி­யாது,'' என்று தமி­ழக தலைமை தேர்­தல் அதி­காரி சத்­ய­பி­ரதா சாஹு தெரி­வித்­துள்­ளார்.

தமி­ழ­கத்­தில் ஏப்­ரல் 6ல் வாக்­குப் பதிவு நடக்­கிறது. வாக்கு எண்­ணிக்கை மே 2ல் நடக்க உள்­ளது. வாக்­குப் பதி­விற்­கும் வாக்கு எண்­ணிக்­கைக்­கும் இடையே நீண்ட இடை­வெளி இருப்­ப­தால் வாக்­குப் பதிவு இயந்­தி­ரங்­களில் முறை­கேடு செய்ய வாய்ப்­புள்­ள­தாக மக்­க­ளி­டம் தவ­றான தக­வல் பரவி வரு­கிறது.

அர­சி­யல் கட்­சி­க­ளின் தவ­றான பிர­சா­ரங்­க­ளால், வாக்­குப் பதிவு இயந்­தி­ரத்­தில் முறை­கேடு செய்ய முடி­யுமோ என்ற சந்­தே­கம் பொது­மக்­க­ளி­ட­மும் ஏற்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பாக விளக்­கம் அளித்­துள்ள தமி­ழக தலைமை தேர்­தல் அதி­காரி சத்­ய­பி­ரதா சாஹு, "வாக்­குப் பதிவு முடிந்த பின் வாக்­குப் பதிவு இயந்­தி­ரங்­கள் பாது­காப்­பாக பூட்­டிய அறை­யில் வைக்­கப்­படும். அந்த அறையை சுற்றி கண்­கா­ணிப்பு கேம­ராக்­கள் பொருத்­தப்­படும். மூன்­ற­டுக்கு பாது­காப்பு போடப்­படும். வாக்­குப் பதிவு இயந்­தி­ரங்­களில் புளு­டூத், ரிமோட், ரேடியோ அலை­கள் என எந்த வித­மான எலக்ட்­ரா­னிக் சாத­னங்­களை கொண்­டும் முறை­கேடு செய்ய முடி­யாது. இதை தேர்­தல் ஆணை­யம் நீதி­மன்­றத்­தில் நிரூ­பித்­துள்­ளது," என்­றார்.

தமி­ழக சட்­ட­சபை தேர்­த­லில் நவீன வாக்­குப் பதிவு இயந்­தி­ரங்­கள் பயன்­ப­டுத்­தப்­பட உள்­ளன.

இவை அனைத்­தும் அண்மையில் தயா­ரிக்­கப்­பட்­டவை. உச்ச நீதி­மன்றம் மற்­றும் தேர்­தல் ஆணை­யத்­தின் அறி­வு­ரை­யின்­படி வாக்­குப் ­ப­திவு இயந்­தி­ரங்­க­ளுக்கு தேவை­யான பாது­காப்பு ஏற்­பா­டு­கள் செய்­யப்­படும்.

தேர்­தல் பணிக்கு 150 பொதுத் தேர்­தல் பார்­வை­யா­ளர்­கள் 14 போலிஸ் பார்­வை­யா­ளர்­கள், 118 செல­வி­னப் பார்­வை­யா­ளர்­கள், 19ஆம் தேதிக்கு முன் தமி­ழ­கம் வர­வி­ருக்­கின்­ற­னர்.

திமுக தரப்­பில், இல்­லத்­த­ர­சி ­க­ளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்­கப்­படும் என திமுக தலை­வர் ஸ்டா­லின் வாக்­கு­றுதி அளித்­துள்­ளது குறித்து செய்­தி­யா­ளர்­கள் கேள்வி எழுப்­பி­னர்.

இதற்­குப் பதி­ல­ளித்த திரு சத்­ய­பி­ரதா சாஹு, "திமுக,வின் வாக்­கு­றுதி தொடர்­பாக எந்­தப் புகா­ரும் வர­வில்லை. அர­சி­யல் கட்­சி­க­ளின் வாக்­கு­று­தி­கள் தொடர்­பாக தேர்­தல் நடத்தை விதி­கள் மீறப்­பட்­ட­தாக புகார் வந்­தால் அது குறித்து தேர்­தல் ஆணை­யம் சம்­பந்­தப்­பட்ட கட்­சி­யி­டம் விளக்­கம் கேட்டு உரிய நட­வ­டிக்கை எடுக்­கும்," என்று கூறி­னார்.