தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

100 அடி ஆழ கிணற்றில் விழுந்த காதல் ஜோடி நல்லவேளையாக உயிர் பிழைத்தது

1 mins read
ace5be53-bff8-47ee-bd93-db24f4e10de5
கயிறு கட்டி மீட்கப்படும் துர்கேஸ்வரன். படம்: ஊடகம் -

தேனி: தேனி அருகே தங்­க­ளது காத­லுக்குப் பெண்­ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரி­வித்­த­தால் திரு மணமான பெண்ணும் கணவரும் ஒரு­வர் மாற்றி ஒரு­வர் 100 அடி ஆழ கிணற்­றில் குதித்­த­னர்.

எனி­னும், அந்­தக் கிணற்­றில் 4 அடி மட்­டுமே தண்­ணீர் இருந்­த­தால், காயங்­க­ளு­டன் உயி­ருக்குப் போராடிய இருவரையும் தீய­ணைப் புத் துறை­யி­னர் மீட்டு, தேனி அரசு மருத்­து­வக்­கல்­லூரி மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­தித்­துள்­ள­னர்.

தேனி மாவட்­டம், வீர­பாண்டி அருகே உள்ள தோட்­டப்­ப­கு­தி­யில் வசித்து வரும் முத்­து­மாரி, 38, என்­ப­வருக்கு மூன்று பிள்ளைகள். கண­வர் இறந்த நிலை­யில் தனது பிள்ளைகளு­டன் வசித்து வரு­கி­றார். வீர­பாண்­டி­யில் உள்ள கல்­லூ­ரி­யில் படித்துவரும் மகன் துர்­கேஸ்­வ­ரனும், 21, மதுரை மாவட்­டம், பால­மேடு பகு­தி­யைச் சேர்ந்த ஜஸ்­வர்யா, 18, என்ற பெண்­ணும் காத­லித்து திடீரென திருமணம் செய்து கொண்டனர். பெண்­ணின் பெற்­றோ­ர் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தம்பதிகள் கிணற் றுக்குள் குதித்தனர்.