தீவிர தேர்தல் பரப்புரையில் டிடிவி தினகரன்

தீவிர தேர்தல் பரப்புரையில் டிடிவி தினகரன்

2 mins read

சென்னை: அறு­பது தொகு­தி­களை தேமு­தி­க­விற்கு ஒதுக்கி கூட்­டணி ஒப்­பந்­தத்­தில் கையெழுத்திட்ட அமமுக இப்போது தனது தேர்தல் பரப்புரையை முடுக்கி விட்டுள்ளது.

குக்கர் சின்னத்தில் போட்டியிடும் அமமுக இந்தத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.

எப்­பா­டு­பட்­டா­வது வரும் சட்­ட­மன்­றத் தேர்­த­லில் அம­முக அதி­க­மான இடங்­களில் வெற்றி பெற வேண்­டும் என்­ப­தில் டி.டி.வி. தின­க­ரன் முனைப்­பு­டன் உள்­ளார். அம­முக மகத்­தான வெற்றி பெறும். அப்போது, நாம் இழந்த அதி­மு­கவை மீட்­டெ­டுப்­போம் என்று அவர் சூளு­ரைத்­துள்­ளார்.

தேர்­த­லுக்­காக அய­ராது பதி­னைந்து நாட்­கள் தொடர்ச்­சி­யா­கப் பரப்­புரை செய்ய டி.டி.வி. தின­க­ரன் திட்­ட­மிட்­டுள்­ளார். அவர் தன் முதல்­கட்­டப் பரப்­பு­ரையை நேற்று மாலை 4 மணிக்கு சென்­னை­யில் உள்ள திரு­வெற்­றி­யூர்த் தேர­டி­யில் தொடங்­கி­னார்.

தொடர்ந்து பொன்­னேரி, மாத­வ­ரம், அம்­பத்­தூர், ஆவடி, பூந்­த­மல்லி கும­ணன்­சா­வடி சந்­திப்பு, மது­ர­வா­யல், போரூர் பாலம் சந்­திப்பு ஆகிய இடங்­களில் தேர்­தல் பரப்­பு­ரை­யில் ஈடு­பட்­டார். இன்­றைக்­கும் சென்­னை­யின் பல பகு­தி­களில் பரப்­புரை செய்­கி­றார்.

பின்­னர் மயி­லா­டு­துறை, நாகப்­பட்­டி­னம், தஞ்­சா­வூர், புதுக்­கோட்டை, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தமி­ழ­கத்­தின் அனைத்து மாவட்­டங்­க­ளுக்­கும் சென்று பரப்­புரை மேற்­கொள்­ள­வி­ருக்­கி­றார்.

இந்­தத் தேர்­த­லில் அம­மு­க­விற்கு வெற்றி வாய்ப்பு ஒளி­ம­ய­மாக உள்­ளது. இந்தத் தேர்­த­லுக்கு பிறகு அதி­முக சித­றி­வி­டும். ஜெய­ல­லி­தா­வின் உண்­மைத் தொண்­டர்­கள் அம­முக பக்­கம் இருக்­கின்­ற­னர். எனவே, அதி­மு­கவை மீட்­போம். அர­சி­ய­லில் இருந்து ஒதுங்­கி­யி­ருப்­ப­தாக சசி­கலா கூறி­யது அவ­ரது விருப்­பம். ஆனால் தேர்­த­லுக்குப் பிறகு சசி­க­லாவை, மீண்­டும் அர­சி­ய­லுக்கு வரவேண்­டும் என்று வலி­யு­றுத்­து­வேன் என்று கூறி­னார்.

இதன்­மூ­லம் சட்­ட­மன்­றத் தேர்­தல் முடி­வு­கள் சசி­க­லா­வின் நிலைப்­பாட்­டில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­த­லாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.