'வாக்குகளை வாங்குவதற்கு அதிமுக கனவு காண்கிறது'

'வாக்குகளை வாங்குவதற்கு அதிமுக கனவு காண்கிறது'

2 mins read
81f3da7f-5463-4cb3-aff4-2ec3bc271ba2
-

சென்னை: விவ­சா­யக் கடன் தள்­ளு­படி குறித்து விவ­சா­யி­க­ளுக்கு எதி­ரா­கவே உச்ச நீதி­மன்­றத்­தில் மேல்­மு­றை­யீடு செய்த முதல்­வர் எடப்­பாடி பழ­னி­சாமி, இப்­போது விவ­சா­யக் கடன்­க­ளைத் தள்­ளு­படி செய்­வ­தா­கக் கூறி வரு­வ­தாக இந்­தி­யக் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் மாநி­லச் செய­லா­ளர் முத்­த­ர­சன் விமர்­சித்­துள்­ளார்.

தஞ்­சா­வூ­ரில் நடந்த அகில இந்­திய இளை­ஞர் பெரு­மன்­றத்­தின் மாநி­லக் குழுக் கூட்­டத்­தில் பங்­கேற்ற திரு முத்­த­ர­சன் இவ்­வாறு தெரி­வித்­தார்.

"தமிழகத்தேர்­தலை அர­சி­யல் போராட்­டக் கள­மாக இந்­திய கம்­யூ­னிஸ்ட் கட்சி கரு­து­கிறது. முதல்­வர் பழ­னி­சாமியின் திட்­டங்­கள், அறி­விப்­பு­கள் யாவும் ஏட்­டிக்­குப் போட்­டி­யா­கவே உள்­ளன. கடந்த நான்கு ஆண்­டு­க­ளா­க, தான் செய்­யாத திட்­டங்­களை எல்­லாம் இப்­போது செய்­வ­தாக வாக்­கு­றுதி அளித்து வரு­கி­றார். கடன் தள்­ளு­படி குறித்து விவ­சா­யி­க­ளுக்கு எதி­ரா­கவே உச்ச நீதி­மன்­றத்­தில் மேல்­மு­றை­யீடு செய்­த­வர், தற்­போது கடன்­களை எல்­லாம் தள்­ளு­படி செய்­வ­தா­கக் கூறி வரு­கி­றார்.

முன்­னாள் முதல்­வர் ஜெய­ல­லி­தா­வின் மர­ணத்­தில் மர்­மம் இருப்­ப­தாக இந்­தி­யக் கம்­யூ­னிஸ்ட் கட்சி ஒரு­போ­தும் கூறி­ய­தில்லை. ஆனால் அது­கு­றித்து விசா­ரணை நடத்த வேண்­டும் என­வும் சிபிஐ விசா­ரிக்க வேண்­டு­மெ­னவும் கூறி­ய­வர் ஓ.பன்­னீர்­செல்­வம். இப்­போது அதற்­கான ஆணை­யத்­தின் காலம் நீட்­டிக்­கப்­பட்டு கொண்டே இருக்­கிறது. இந்த நிலை­யில் ஜெய­ல­லி­தா­வின் மர­ணத்­துக்கு மு.க.ஸ்டா­லின்­தான் கார­ணம் எனக் கூறி பிரச்­சி­னை­யைத் திசை­தி­ருப்­பப் பார்க்­கி­றார் பழ­னி­சாமி. தன்­னு­டைய பத­விக்கு ஏற்­ப கருத்­து­களை முதல்­வர் பேச­வேண்­டும். அதை­விட்­டு­விட்டு அவர் பேசும் முறை­களும் விமர்­ச­னங்­களும் அர­சி­ய­லுக்கு உகந்­த­தாக இல்லை, என­வே­தான் இந்­தத் தேர்­தலை அர­சி­யல் போராட்­டம் நிறைந்த தேர்­த­லா­கப் பார்க்­கி­றோம். அதி­முக, தன்­னு­டைய பலம், தேர்­தல் அறிக்கை, கூட்­டணி பலம் ஆகி­ய­வற்றை நம்பி இல்லை. பணத்­தால் வென்றிடலாமென பகல் கனவு காண்கிறது. இப்போது அது மக்களிடம் எடுபடாது.

பண விநியோகத்திற்குரிய எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டார்கள். அதற்கு உதாரணம்தான் வேளாண் துறை அமைச்சர் இறந்தபோது நடைபெற்ற சம்பவங்கள். பணம் கொடுத்து வாக்குகளை வாங்கி விடலாம் என்னும் அதிமுகவின் கனவு பகல் கனவாகத்தான் போகும்,'' என்று முத்தரசன் தெரிவித்தார்.