தமிழ்நாட்டில் முகக்கவசம் அணியாவிடில் அபராதம்

தமிழ்நாட்டில் முகக்கவசம் அணியாவிடில் அபராதம்

2 mins read

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா தொற்று மிக­வும் சிறப்­பான வகை­யில் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டது. இத­னால் தினந்­தோறும் பாதிக்­கப்­ப­டு­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை 500க்கு கீழ் பதி­வா­னது. இந்த நிலை­யில்­தான் கடந்த சில நாட்­க­ளாக நாள்தோ­றும் பாதிக்­கப்­ப­டு­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை அதிக­ரிக்க தொடங்­கி­யுள்­ளது. குறிப்­பாக சென்னை, திருச்சி போன்ற நக­ரங்­களில் அதி­க­ரித்­துள்­ளது.

கடந்த 10 நாட்­க­ளாக 1.2 விழுக்­காடு அதி­க­ரித்­துள்­ளது. அதே­போல் சிகிச்சை பெறு­ப­வர்­க­ளின் எண்­ணிக்­கை­யும் அதி­க­மாக உள்­ளது.

இத­னால் தலை­மைச் செய­லா­ளர் அனைத்து மாவட்ட ஆட்­சி­யர்­க­ளு­டன் காணொளிக் காட்சி மூலம் ஆலோ­சனை நடத்­தி­னார். அப்­போது முகக்­க­வ­சம் அணி­ய­வில்லை எனில் அப­ரா­தம் விதிக்­க­லாம் என உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளார்.

மேலும், அரசு வழி­காட்டு நெறி­மு­றை­களைக் கடை­ப்பி­டிக்­காத நிறு­வ­னங்­கள் மீதும் அப­ரா­தம் விதிக்க வேண்­டும் என உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளார்.

தமி­ழ­கத்­தில் நேற்று ஒரே நாளில் 64 ஆயி­ரத்து 645 பேருக்கு கொரோனா பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்­டது. இதில் 476 ஆண்­கள், 360 பெண்­கள் என மொத்­தம் 836 பேர் தொற்றால் பாதிக்­கப்­பட்டு உள்­ள­னர். அதி­க­பட்­ச­மாக சென்­னை­யில் 317 பேரும், செங்­கல்­பட்­டில் 81 பேரும், கோவை­யில் 70 பேரும், குறைந்­த­பட்­ச­மாக அரி­ய­லூர், தர்­ம­புரி, கள்­ளக்­கு­றிச்சி, தென்­காசி, ராம­நா­த­பு­ரத்­தில் தலா ஒரு­வ­ரும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

நேற்று அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் புதி­தாக பாதிப்பு கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

இந்த பட்­டி­ய­லில் 12 வய­துக்­குட்­பட்ட 38 குழந்­தை­க­ளுக்­கும், 60 வய­துக்கு மேற்­பட்ட 165 முதி­ய­வர்­க­ளுக்­கும் தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

தமி­ழ­கத்­தில் நேற்று கொரோ­னா­வுக்கு 4 பேர் உயி­ரி­ழந்­தனர். அந்­த­வ­கை­யில் சென்னை, கோவை, மதுரை, நாகப்­பட்­டி­னத்­தில் தலா ஒரு­வ­ர் என 4 மாவட்­டங்­களில் உயி­ரி­ழப்பு ஏற்­பட்­டுள்­ளது. தமி­ழ­கத்­தில் இது­வ­ரை­யில் 12 ஆயி­ரத்து 551 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர். தமி­ழ­கத்­தில் கொரோனா பாதிப்­பில் இருந்து 553 பேர் நேற்று குண­ம­டைந்து வீடு திரும்­பி­னர்.

தமி­ழ­கத்­தில் சென்னை, கோவை, செங்­கல்­பட்டு, தஞ்­சா­வூர் உள்­ளிட்ட மாவட்­டங்­களில் தற்­போது அதி­க­ரித்து வரு­கிறது.

தமி­ழ­கத்­தில் 66 நாட்­க­ளுக்கு பின்­னர் நேற்று மீண்­டும் 800க்கும் மேற்­பட்­ட­வர்­க­ளுக்­குத் தொற்று பாதிப்பு உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

மேலும் 50 நாட்­க­ளுக்குப் பின்­னர் கொரோனா சிகிச்சை பெறு­கி­ற­வர்­க­ளின் எண்­ணிக்கை ஐயா­யி­ரத்­தைக் கடந்­துள்­ளது.

இதில் அதி­க­பட்­ச­மாக சென்­னை­யில் 266 பேரும், செங்­கல்­பட்­டில் 57 பேரும், கோவை­யில் 49 பேரும் அடங்­கு­வர்.