கமல்ஹாசன்: இருவரில் ஒருவருக்கு வேண்டாம்; மூன்றாவது அணிக்கு வாய்ப்பளியுங்கள் தலைவர்கள் சூறாவளி பிரசாரம்

கமல்ஹாசன்: இருவரில் ஒருவருக்கு வேண்டாம்; மூன்றாவது அணிக்கு வாய்ப்பளியுங்கள் தலைவர்கள் சூறாவளி பிரசாரம்

2 mins read
85667bb8-d9c4-4b93-b47e-509ba34aa5a1
திருவையாறு தேரடியில் நேற்று பாஜக வேட்பாளர் பூண்டி எஸ். வெங்கடேசனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி. படம்: தமிழக ஊடகம் -

சென்னை: தமி­ழ­கத்­தில் இன்­னும் 20 நாள்­களில் சட்­ட­மன்­றத் தேர்­தல் நடை­பெற உள்­ள­தால், அனைத்து அர­சி­யல் கட்­சி­யி­ன­ரும் ஒவ்ெவாரு நிமி­டத்­தை­யும் பொன்­னாக மதித்து வாக்கு சேக­ரிப்பு, பிர­சா­ரப் பணி களில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

இத­னால், தேர்­தல் களத்­தில் அனல் பறந்து வரு­கிறது.

தமி­ழக சட்­ட­மன்­றத் தேர்­த­லும் கன்­னி­யா­கு­மரி மக்­க­ளவை இடைத்­தேர்­த­லும் அடுத்த மாதம் 6ஆம் தேதி நடை­பெற உள்­ளன.

இதை­ய­டுத்து, தீவிர பிர­சா­ரத்­தில் குதித்­துள்ள ஆளும் அதி­முக, எதிர்க்­கட்­சி­யான திமுக, காங்­கி­ரஸ், பாஜக, மநீம, அம­முக, நாம் தமி­ழர் கட்சி உள்­ளிட்ட அனைத்­துக் கட்சி வேட்­பா­ளர்­களும் வாக்­கு­று­தி­களை அள்ளி வீசி வரு­கின்­ற­னர்.

இடை­யி­டையே, தங்­க­ளுக்­குப் பிடிக்­காத கட்­சி­களை ஊழல், நேர் மையற்ற கட்­சி­கள் என்­றும் கடு மையா­கச் சாடி வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், திரு­வை­யா­றில் பாஜக வேட்­பா­ளர் பூண்டி வெங்க டேசனை ஆத­ரித்து முதல்­வர் பழனி­சாமி பிர­சா­ரம் செய்­தார்.

அப்­போது பேசி­ய­வர், "ரூ. 80,000 கோடி மதிப்­பி­லான கோதா­வரி - காவிரி இணைப்­புத் திட்­டத்தை நிறை­வேற்ற உத­வு­வ­தாக பிர­த­மர் மோடி உறுதி அளித்­துள்­ளார்.

"மீண்­டும் அதி­முக அரசு அமைந்­த­வு­டன் அந்­தத் திட்­டம் முழு­வீச்­சில் செயல்­ப­டுத்­தப்­படும். தண்­ணீ­ருக்கு கர்­நா­ட­கத்தை நம்பி இருக்­கும் நிலைமை இனி வராது," என்­ற­வர், "வரும் தேர்­த­லில் வாரிசு அர­சி­ய­லுக்கு சாவு மணி அடிப் ேபாம்," என்­றும் விமர்­சித்­தார்.

இதற்­கி­டையே, மது­ரை­யில் திமுக வேட்­பா­ளா்­களை ஆத­ரித்து நேற்று பிர­சா­ரம் செய்த திமுக தலை வர் மு.க.ஸ்டா­லின், "நான்­கூட 200 தொகு­தி­க­ளில்­தான் திமுக கூட்­டணி வெற்­றி­பெ­றும் என நினைத்­தேன். ஆனால், 234 தொகு­தி­க­ளி­லும் வெற்­றி­பெற்று தமி­ழ­கத்­தில் எதிர்க்­கட்­சியே இல்­லாத நிலைமை உரு­வா­கப் போகிறது.

"திமு­க­வில் 16 வய­தில் இளைஞா் அணி உறுப்­பி­ன­ராகி அதன்­பின் எம்­எல்ஏ, மேயர், உள்­ளாட்­சித் துறை அமைச்­சர், துணை முதல்­வர் என தொடர்ந்து பல பத­வி­க­ளை­யும் வகித்­துள்­ளேன்.

"இந்­தத் தோ்தலில் தமி­ழ­கத்தை ஆள எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங் கள்," என்­றும் ஸ்டா­லின் மக்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டார்.

மக்­கள் நீதி மய்­யம் கட்­சி­யின் தலைவா் கமல்ஹாசன் கோவையில் பேசியபோது, "ஆளும் கட்சி விஷப்­பாம்பு போன்­றது. தலை­துண்­டிக்­கப்­பட்ட நிலை­யில் வால் மட்­டும் ஆடிக் கொண்­டுள்­ளது.

"மற்­றொரு கட்­சி­யில் தலையுள்­ளது. ஆனால், அது­வும் மிக­வும் ஆபத்­தா­னது. எனவே, இரு­வ­ரில் ஒரு­வ­ருக்கு வாக்கு என்­பதை கைவிட்டு மூன்­றா­வது அணிக்கு வாய்ப்­புத் தாருங்­கள். எம்­ஜிஆா் தொடங்­கி­யதே மூன்­றா­வது அணி­தான். அது­தான் வெற்­றி­பெற்று மற்ற கட்­சி­களை வன­வா­சம் போகச் செய்­தது," என்றார்.