'புதுச்சேரியில் நாராயணசாமி போட்டியிட மாட்டார்'

'புதுச்சேரியில் நாராயணசாமி போட்டியிட மாட்டார்'

1 mins read

புதுச்­சேரி: புதுச்­சேரி சட்­ட­மன்­றத் தேர்­த­லில் முன்­னாள் முதல்­வர் நாரா­ய­ண­சாமி போட்­டி­யிட மாட்­டார் என காங்­கி­ரஸ் மேலி­டப் பொறுப்­பா­ளர் தினேஷ் குண்­டு­ராவ் தெரி­வித்­துள்­ளார்.

புதுச்­சே­ரி­யில் காங்­கி­ரஸ் கட்சி போட்­டி­யி­டும் 14 தொகு­தி­க­ளுக்கு வேட்­பா­ளர்­கள் அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், அதில் நாரா­ய­ண­சாமியின் பெயர் இடம்­பெ­ற­வில்லை.

தமி­ழ­கத்­து­டன் சேர்த்து யூனி­யன் பிர­தே­ச­மான புதுச்­சேரியில் வரும் ஏப்­ரல் 6ஆம் தேதி அன்று சட்­ட­மன்­றத் தேர்­தல் நடைபெற உள்­ளது. புதுச்­சே­ரி­யில் 15 தொகு­தி­களில் காங்­கி­ரஸ் போட்­டி­யி­டும் நிலை­யில் ஏனம் தொகு­திக்கு மட்­டும் இன்­னும் வேட்­பா­ளர் அறி­விக்­கப்­ப­ட­வில்லை.

கடந்த 2016 தேர்­த­லில் போட்டி யிடாத நாரா­ய­ண­சா­மியை புதுச்­சேரி முதல்­வ­ராக அறி­வித்­தது அகில இந்­திய காங்­கி­ரஸ் தலைமை. தொடர்ந்து அதன் பின்­னர், நடை­பெற்ற இடைத் தேர்­த­லில் நாரா­ய­ண­சாமி நெல்­லித்­தோப்பு தொகு­தி­யில் போட்­டி­யிட்டு வெற்­றி­பெற்­றார்.

புது­வை­யில் இரு சட்­ட­மன்­றத் தொகு­தி­களில் போட்­டி­யிட என்.ஆா். காங்­கி­ரஸ் தலைவா் என்.ரங்­க­சாமி முடிவு செய்­துள்ளாா். அதன்­படி, தட்­டாஞ்­சா­வடி தொகுதி யில் அவா் ஏற்­கெ­னவே வேட்­பு­மனு தாக்­கல் செய்­துள்ள நிலை­யில், ஏனம் தொகு­தி­யில் போட்­டி­யிடுவதற்­காக நேற்று வேட்­பு­மனு தாக்­கல் செய்­தார்.