மீண்டும் ஊரடங்கு: அமைச்சர் எச்சரிக்கை

மீண்டும் ஊரடங்கு: அமைச்சர் எச்சரிக்கை

2 mins read

தேர்தல் நடக்குமா என்பது குறித்து தேர்தல் அதிகாரி விளக்கம்

சென்னை: மக்­கள் அலட்­சி­ய­மாக இருந்­தால் கொரோனா கிரு­மித்­தொற்று மேலும் அதி­க­ரிக்­கும் என்­றும் அதைக் கட்­டுப்­ப­டுத்த மீண்­டும் முழு ஊர­டங்கு நிலையை அமல்­ப­டுத்த வேண்­டி­யி­ருக்­கும் என்­றும் அமைச்­சர் மாஃபா பாண்­டி­ய­ரா­ஜன் தெரி­வித்­துள்­ளார்.

தேர்­த­லும் பிர­சா­ர­மும் எந்­த­ளவு முக்­கி­யமோ, அதற்கு இணை­யாக மக்­க­ளின் உயி­ரும் முக்­கி­யம் என செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசு­கை­யில் அவர் குறிப்­பிட்­டார்.

தமி­ழ­கத்­தில் மீண்­டும் கொரோனா தொற்­றுப்­ப­ர­வல் மெல்ல அதி­க­ரித்து வரு­கிறது. நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் சுமார் ஆயி­ரம் பேர் புதி­தாக பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது.

இந்­நி­லை­யில் பொது­மக்­கள் பொறுப்­பு­டன் நடந்­து­கொள்ள வேண்­டும் என அமைச்­சர் வலி­யு­றுத்தி உள்­ளார்.

"கொரோனா கிரு­மித்­தொற்­றின் இரண்­டாம் அலை தமி­ழ­கத்­தில் ஏற்­ப­டா­மல் பார்த்­துக்கொள்­வது நம் பொறுப்பு. தற்­போது அதி­க­ரித்து­வ­ரும் கிரு­மித்­தொற்று குறித்து அதி­கா­ரி­கள் ஆய்வு செய்து வரு­கின்­ற­னர்.

"கேரளா, மகா­ராஷ்­டிரா உள்­ளிட்ட சில மாநி­லங்­கள் கொரோனா இரண்­டா­வது அலையை எதிர்­கொண்­டுள்­ளன. தமி­ழ­கத்­தி­லும் இரண்­டாம் அலை ஏற்­படும் பட்­சத்­தில் மீண்­டும் ஊர­டங்கை அமல்­ப­டுத்த வேண்­டிய நிலை வர­லாம்," என்­றார் அமைச்­சர் பாண்­டி­ய­ரா­ஜன்.

தமி­ழ­கத்­தில் நேற்று முன்­தினம் 945 பேருக்­கு கொரோனா கிருமி தொற்­றி­யது உறு­தி­யா­னது. இத­னால் ஏப்­ரல் 6ஆம் தேதி சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் அறி­வித்­த­படி நடக்­குமா எனும் சந்­தே­கம் பர­வ­லாக எழுந்­துள்­ளது.

இது­கு­றித்து தமி­ழ­கத் தலை­மைத் தேர்­தல் அதி­காரி சத்­ய­பி­ரத சாகு தெளி­வு­ப­டுத்தி உள்­ளார்.

கொரோனா தொற்­றுப் பர­வ­லுக்கு மத்­தி­யில் பீகார் மாநி­லத்­தில் சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் நடந்­ததை அவர் நினை­வு­கூர்ந்­தார்.

"தேர்­தல் நடந்­த­போது பீகா­ரில் நாள்­தோ­றும் 12 ஆயி­ரம் பேர் புதி­தாக பாதிக்­கப்­பட்டு வந்­தனர். தமி­ழகத்தில் ஆயி­ரத்­துக்­கும் குறை­வா­னோர் மட்­டுமே பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

"தேர்தலின்போது தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பதற்கான ஆலோசனைகளை அரசு வழங்கும். அதை நாங்கள் அமல்படுத்துவோம். எனினும் அறிவித்தபடி தேர்தல் நடக்குமா அல்லது ஒத்தி வைக்கப்படுமா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை," என்றார் சத்யபிரத சாகு.