தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வருமானவரிச் சோதனையில் சிக்கிய ரூ.5 கோடி ரொக்கம்

1 mins read

சென்னை: வரு­மா­ன­வ­ரித் துறை­யி­னர் சென்­னை­யில் உள்ள மூன்று கடை­களில் நடத்­திய சோத­னை­யின்­போது ஐந்து கோடி ரூபாய் ரொக்­கப் பணத்தை பறி­மு­தல் செய்­த­னர்.

இது 'ஹவாலா' பணப்­ப­றி­மாற்­றத்­துக்­காக பயன்­ப­டுத்­தப்­பட்ட தொகை என்­பது தெரிய வந்­துள்­ளது. செவ்­வாய்க்­கி­ழமை இரவு தொடங்­கிய இந்­தச் சோதனை விடிய விடிய நடை­பெற்­றது. முதல் கடை­யில் சோத­னை­யிட்­ட­போது ரொக்­கப்­ப­ணம் ஏதும் கிடைக்­க­வில்லை.

எனி­னும் முறை­கே­டான வகை­யில் மேற்­கொள்­ளப்­பட்ட பணப் பரிமாற்றம் குறித்த முக்­கிய ஆவ­ணங்­கள் கைப்­பற்­றப்­பட்­டன. பின்­னர் கடை­யின் உரி­மை­யா­ளர்­க­ளி­டம் நடத்­தப்­பட்ட கிடுக்­கிப்­பிடி விசா­ர­ணை­யின்­போது அரு­கில் உள்ள கடை­களில் 'ஹவாலா' பணம் இருப்­பது தெரிய வந்­தது.