தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முன்னெச்சரிக்கை நடவடிக்கை: 21,000 ரவுடிகள் அதிரடிக் கைது

1 mins read

சென்னை: சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் தொடர்­பான முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக தமி­ழ­கம் முழு­வ­தும் சுமார் 21 ஆயி­ரம் ரவு­டி­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக காவல்­துறை தெரி­வித்­துள்­ளது.

மேலும் மாநி­லம் முழு­வ­தும் நடத்­தப்­பட்ட அதி­ரடிச் சோதனை நட­வ­டிக்­கை­யின்­போது அனு­ம­தி­யும் உரி­ம­மும் இன்றி பயன்­ப­டுத்­தப்­பட்ட நாட்டு துப்­பாக்­கி­கள் பறி­மு­தல் செய்யப்­பட்­டன.

இது தொடர்­பாக காவல்­துறை தலை­வர் அலு­வ­ல­கம் வெளி­யிட்ட அறிக்கை ஒன்­றில், கைதா­ன­வர்­களில் 166 பேர் முக்­கிய ரவு­டி­கள் பட்­டி­ய­லில் இடம்­பெற்­ற­வர்­கள் என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

மேலும், 732 பேர் குண்­டர் தடுப்பு சட்­டத்­தின் கீழ் சிறை­யில் அடைக்­கப்­பட்­டுள்­ள­னர் என்­றும், 18,183 பேர் நன்­ன­டத்தை பிணைய பத்­தி­ரத்­தில் கையெ­ழுத்­திட்­டுள்­ள­னர் என்­றும் அந்த அறிக்கை தெரி­விக்­கிறது.

"நீதி­மன்­றத்­தால் பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்டு தலை­ம­றை­வாக இருந்து வந்த 14,343 பேர் கைது செய்­யப்­பட்டு சிறை­யில் அடைக்­கப்­பட்­டுள்­ள­னர். தனி­ந­பர் பாது­காப்­புக்­காக உரி­மம் பெற்று வைத்­தி­ருந்த 18,593 துப்­பாக்­கி­கள் திரும்ப பெறப்­பட்­டன.

"தர்­ம­புரி, ஈரோடு, கிருஷ்­ணகிரி, வேலூர், திருப்­பத்­தூர், மதுரை ஆகிய மாவட்­டங்­களில் உரி­மம் இல்­லா­மல் தனி­ந­பர்­கள் வைத்­தி­ருந்த 16 நாட்டு துப்­பாக்­கி­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன," என காவல்­துறை தலை­வர் அலு­வ­ல­கத்­தின் அறிக்கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் வெடி­ம­ருந்­து­கள், ஜெலட்­டின் குச்­சி­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­ட­தா­க­வும் மது கடத்தல், விற்­பனை தொடர்­பாக சுமார் 9 ஆயி­ரம் பேர் கைதா­ன­தா­க­வும் அறிக்கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. தமி­ழ­கத்­தில் தேர்­தல் பாது­காப்புப் பணிக்­காக இது­வரை 65 பட்­டா­லி­யன் துணை ராணு­வப்­ப­டை­யி­னர் வந்­துள்­ள­னர்.