சென்னை: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு வாரங்களே உள்ளதால், அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மாநிலத்தில் உள்ள 234 தொகுதி களிலும் அதிரடி பிரசாரத்தையும் வித்தியாசமான வாக்கு சேகரிப்பு யுக்திகளையும் வேட்பாளர்களும் அரசியல் கட்சியினரும் தீவிரப் படுத்தி உள்ளனர்.
ஆங்காங்கே இந்த வேட்பாளர் களின் வெற்றிக்கு அவர்களது ஆதரவாளர்களும் தொண்டர்களும் பிரபலங்களும் கலைஞர்களும் கைகொடுத்து வருகின்றனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தலும் கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலும் அடுத்த மாதம் 6ஆம் தேதி நடைபெற உள்ளன.
இதையடுத்து, தீவிர பிரசாரத்தில் குதித்துள்ள ஆளும் அதிமுக, எதிர்க்கட்சியான திமுக, காங்கிரஸ், பாஜக, மநீம, அமமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
காய்கறிச் சந்தைக்கு வந்த மக்களிடம் காய்கறி வியாபாரம் செய்தும் தனக்குத் துணையாக வந்தவர்களுக்கு தேநீர் போட்டுக் கொடுத்தும் திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் வி. பன்னீர்செல்வம் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ரமேஷ், கூட்டணிக் கட்சியான அமமுக உறுப்பினர்களுடன் இணைந்து புளியம்பட்டி ஆயிரங்கண் மாரியம்மன் கோவிலுக்கு வழிபட வந்தவர்களிடம் வாக்கு சேகரித்தார்.
குடிநீர் உள்பட மக்களின் அடிப்படை தேவைகளுக்காக கடந்த ஐந்து ஆண்டுகளாக உழைத்து உள்ளதால் எவ்வித கூச்சமும் இன்றி நான் வாக்கு சேகரிப்பேன் என்று சென்னை திருவிக நகர் தொகுதியில் திமுக வேட்பாளர் தாயகம் கவி வாக்கு சேகரித்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப் பிடாரம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ஆறுமுக நயினார், புதியம்புத்தூர் பேருந்து நிலையத்துக்கு மாட்டு வண்டியில் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லி புத்தூர் தனித் தொகுதியில் போட்டி யிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாதவ ராவ், "சட்டமன்ற உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் எனது சம்பளம் அனைத்தையும் தொகுதி மக்களின் வளர்ச்சிக்காகவே அர்ப்பணிப்பேன்," என்றார்.
சிறந்த கல்வி, தரமான மருத்து வம் வேண்டும் என்றால் விவசாய சின்னத்திற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை யில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக ஆட்சி காலத்தில் நிலவி வந்த மின்சார தட்டுப்பாட்டை அதிமுக அரசு ஒரே ஆண்டில் நீக்கிவிட்டதாகக் கூறினார்.
போடி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வரை ஆதரித்து திரைப்பட இயக்குநர் மனோபாலா வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். "அதிமுகவிற்கு வாக்களித்தால் அடுத்த ஐந்தாண்டுகள் மக்கள் நிம்மதியாக வாழலாம்," என்றார்.

