கடலில் 13.35 மணி நேரம் நீந்தி 48 வயது பெண் சாதனை

கடலில் 13.35 மணி நேரம் நீந்தி 48 வயது பெண் சாதனை

1 mins read
b9e5b41d-872b-49fd-8657-cf6ed76468da
கடலில் 13 மணி நேரம் நீந்திவிட்டு பத்திரமாக திரும்பியுள்ள ஷ்யாமளா ஹோலி. படம்: தமிழக ஊடகம் -

ராமே­சு­வ­ரம்: தலை­மன்­னார்- தனுஷ்­கோடி இடையே கட­லில் 13.35 மணி நேரம் நீந்தி முதல் முறை­யாக 48 வயது பெண் ஒரு­வர் சாதனை புரிந்­துள்­ளார்.

இலங்கை தலை­மன்­னா­ருக்­கும் தனுஷ்­கோ­டிக்­கும் இடையே சுமார் 28 கிலோ மீட்­டர் தூரம் உள்ள கட­லில் நீந்­திச் செல்­வ­தற்­காக தெலுங்­கானா மாநி­லம் ஹைதரா பாத்தைச் சேர்ந்த ஷ்யா­மளா ஹோலி, கடந்த 18ஆம் தேதி ராமே­சு­வ­ரம் சங்­கு­மால் கடற்­கரையி­லி­ருந்து ஒரு விசைப்­ப­ட­கில் 14 பேர் கொண்ட குழு­வு­டன் தலை­மன்­னா­ருக்குப் புறப்­பட்­டுச் சென்­றார். அங்­கி­ருந்­த­படி, 19ஆம் தேதி அதி­காலை 4.15 மணி­ய­ள­வில் நீந்­தத் தொடங்­கி­னார்.

அவ­ருக்கு அனைத்­து­லக கடல் எல்லை வரை இலங்கை கடற்­படையினர் பாது­காப்பு வழங்­கி­னர்.

அதைத்­தொ­டர்ந்து, இந்­திய கடல் பகு­திக்­குள் நீந்தி வரும்­போது கடல் அலை­யின் வேகம் அதி­க­மாக இருந்­த­தால் நீந்­து­வ­தில் ஷ்யா­ம­ளா­வுக்கு சற்று சிர­மம் ஏற்­பட்­டது. இத­னால் சற்று கால­தா­ம­த­மாக வெள்­ளிக்­கி­ழமை மாலை 5.50 மணி­ய­ள­வில் 13.35 மணி­நே­ரத்­தில் தனுஷ்­கோடி வந்­த­டைந்­தார்.

தனுஷ்­கோடி வந்­த­டைந்த ஷ்யா­மளா ஹோலியை சமூக ஆர்­வ­லர் களும் சுற்­று­லாப் பய­ணி­களும் பொன்­னாடை, மாலை அணி­வித்து உற்­சா­க­மாக வர­வேற்று கொண்­டா­டி­னார்­கள். இது மிகுந்த மகிழ்ச்சி அளிப்­ப­தாக ஷ்யா­மளா ஹோலி தெரி­வித்­தார்.