கிருமி பாதிப்பு அதிகரிப்பால் மீண்டும் மூடப்படும் பள்ளிகள்

கிருமி பாதிப்பு அதிகரிப்பால் மீண்டும் மூடப்படும் பள்ளிகள்

2 mins read

சென்னை: தமி­ழ­கத்­தில் மூன்று மாதங்­க­ளுக்குப் பிறகு கொரோனா கிருமி பாதிப்பு மீண்­டும் ஆயி­ரத்தை தாண்­டி­யுள்­ள­தால், நாளை 22ஆம் தேதி முதல் மறு உத்­த­ரவு வரும் வரை 'ப்ளஸ் 2' வகுப்­பு­கள் நீங்­க­லாக மற்ற அனைத்து பள்ளி களுக்­கும் விடு­முறை விடப்­ப­டுவ தாக தமி­ழக அரசு அறி­வித்­துள்­ளது.

இதே­போல், புதுச்­சே­ரி­யி­லும் நாளை 22ஆம் தேதி முதல் மே மாதம் 31ஆம் தேதி வரை பள்ளி களுக்கு விடு­முறை விடப்­ப­டுவ தாக மாநில துணை­நிலை ஆளு­நர் தமி­ழிசை செளந்­த­ர­ரா­ஜன் தெரி­வித்­துள்­ளார்.

தமி­ழ­கத்­தில் கடந்த 24 மணி நேரத்­தில் இத்­தொற்­றால் பாதிக்­கப் பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 1,087 ஆக உயர்ந்­துள்­ளது.

குறிப்­பாக மாண­வர்­கள், ஆசி­ரி­யர்­க­ளுக்கு இப்­பா­திப்பு அதி­கம் உறு­தி­யாகி வரு­கிறது.

தஞ்சை மாவட்­டத்­தில் மேலும் 29 பேருக்கு நேற்று இக்­கி­ருமி பாதிப்பு உறு­தி­யா­னதை அடுத்து, பாதிக்­கப்­பட்ட பள்ளி மாண­வர்­கள், ஆசி­ரி­யர்­க­ளின் எண்­ணிக்கை 142 ஆக உயர்ந்­துள்­ளது.

தஞ்­சா­வூ­ரில் கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தில் அலட்­சி­ய­மாக செயல்­பட்ட ஒரு பள்ளி மீது வழக்­குப் பதிவு செய்­துள்ள மாவட்ட நிர்­வா­கம், இரு பள்­ளி­க­ளுக்கு அப ராதம் விதித்­துள்­ளது.

"பொது­மக்­கள் முகக்­க­வ­சம் அணி­யா­மல் வெளியே வர வேண்­டாம். போதிய ஒத்­து­ழைப்பை கொடுத்­தால், கிரு­மிப் பர­வலை கட்­டுக்­குள் கொண்­டு­வர முடியும்," என்று மாவட்ட ஆட்­சியா் ம. கோவிந்­த­ராவ் தெரி­வித்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், கிரு­மிப் பர­வலை முறி­ய­டிக்க பள்­ளிக்­கூ­டங்­க­ளுக்கு விடு­முறை விடப்­பட்­டுள்­ளது.

இது­தொ­டர்­பாக தமி­ழக தலை மைச் செய­லா­ளர் ராஜீவ் ரஞ்­சன் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், "9, 10, 11ஆம் வகுப்­பு­க­ளுக்கு இணைய, 'டிஜிட்­டல்' வகுப்­பு­கள் தொடர்ந்து நடத்­தப்­படும். பொதுத்­தேர்வு எழு­தும் மாண­வர்­க­ளுக்கு சிறப்பு வகுப்­பு­களை நடத்­த­லாம்.

"கொரோனா வழி­காட்டி நெறி முறை­க­ளின்­படி பன்­னி­ரண்­டாம் வகுப்­பு­களை நடத்­த­லாம். அம்­மா­ண­வர்­க­ளுக்­கான விடு­தி­களும் செயல்­பட அனு­மதி வழங்­கப்­ப­டு­கிறது," எனக் குறிப்­பிட்­டுள்­ளார்.