தமிழகத்தில் மீண்டும் தொற்று அச்சம்

தமிழகத்தில் மீண்டும் தொற்று அச்சம்

2 mins read

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிவேகமாகப் பரவுகிறது; மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

தமி­ழ­கத்­தில் ஒரே நாளில் கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 1200ஐ கடந்­துள்­ளது.

தமி­ழ­கத்­தில் கடந்த இரு வாரங்­க­ளாக கொரோனா தொற்று வேக­மாக அதி­க­ரித்து வரும் நிலை­யில், சுகா­தா­ரத்­துறை வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், ஒரே நாளில் புதி­தாக 1,243 பேருக்கு தொற்று உறு­தி­யா­ன­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­மூ­லம், தொற்று பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை 8 லட்­சத்து 65,000ஐ கடந்­துள்­ளது.

சென்­னை­யில் அதி­க­பட்­ச­மாக 458 பேருக்­கும், செங்­கல்­பட்­டில் 134 பேருக்­கும், கோவை­யில் 103 பேருக்­கும் புதி­தா­கத் தொற்று கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. மேலும், திரு­வள்­ளூ­ரில் 87, தஞ்­சா­வூ­ரில் 85, காஞ்­சி­புரத்­தில் 41, திருப்­பூ­ரில் 33 பேருக்­கும் தொற்று உறு­தி­யா­கி­யுள்­ளது.

தொற்று பாதிப்­பால் சென்­னை­யில் 2 பேர் உட்­பட ஒரே நாளில் 8 பேர் உயி­ரி­ழந்­த­தால், இறப்பு எண்­ணிக்கை 12,590 ஆக அதி­க­ரித்­துள்­ளது. தமி­ழ­கம் முழு­வ­தும் தற்­போது 7,291 பேர் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

2020 டிசம்­ப­ருக்­குப் பின், தற்­போது இரண்­டா­வது நாளாக பாதிப்பு எண்­ணிக்கை ஆயி­ரத்தை கடந்­துள்­ள­தால் இரண்­டா­வது அலை வீசுமோ என்ற அச்­சம் மக்­க­ளி­டம் எழுந்­துள்­ளது.

தமி­ழக அரசு தடுப்­பூசிப் பணி­யை­யும் முடுக்கிவிட்­டுள்­ளது. சென்­னை­யின் 6 மண்­ட­லங்­களில் சனிக்­கி­ழமை ஒரே நாளில் 2,000 பேருக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­ட­தாக சென்னை மாந­க­ராட்சி ஆணை­யா­ளர் பிர­காஷ் தெரி­வித்­தார். இது­வரை சென்­னை­யில் மட்­டும் 4.15 லட்சம் பேருக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது. ஏப்ரல் மாத இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 30 லட்சம் ஆகிவிடும் என்று அவர் கூறினார்.

இந்­நி­லை­யில், கோயம்­புத்­தூர் பகு­தி­யில் கொவிட்-19 தொற்று அதி­வே­க­மா­கப் பர­வு­வ­தாக அம்­மா­வட்ட ஆட்­சி­யர் ராஜா­மணி எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார்.

கோவை­யின் நகர்ப்­ப­குதி, கிரா­மப்­பு­றங்­கள் என அனைத்­துப் பகு­தி­க­ளி­லும் தொற்று மீண்­டும் தலை­யெ­டுத்­துள்­ளது. அனை­வ­ரும் விழிப்­பு­டன் இருந்து, நோய் எதிர்ப்பு சக்­தியை வலுப்­ப­டுத்­து­வ­தோடு அர­சின் வழி­காட்டி நெறி­மு­றை­களைக் கடை­ப்பி­டித்­தால் மட்­டுமே, இந்த ஆபத்­தில் இருந்து தப்­பிக்க முடி­யும் என்­றார் திரு ராஜா­மணி.

பொது இடங்­களில் முகக் கவ­சம் அணி­யா­மல் செல்­லு­தல், கூட்­ட­மா­கச் செல்­லு­தல், வழி­காட்டி நெறி­மு­றை­க­ளைப் பின்­பற்­றா­மல் இருத்­தல் போன்ற கார­ணங்­க­ளால், மாவட்­டத்­தில் மீண்­டும் தொற்­றின் இரண்­டாம் அலை வீசும் சூழல் ஏற்பட்டுள்ளது.

திரு­ம­ணம் போன்ற பொது நிகழ்ச்­சி­களில் வரு­கை­யா­ளர்­கள் முகக்­க­வ­சம் எது­வும் அணி­யா­மல் கூட்­ட­மா­கக் கலந்­து­கொண்­ட­தும் தொற்­றுப் பர­வ­லுக்­குக் கார­ண­மாக இருக்­க­லாம் என்று கூறப்­ப­டு­கிறது.