மதுரை: மதுரை தெற்குத் தொகுதி சுயேச்சை வேட்பாளராக கள மிறங்கும் சரவணன் தனது தேர்தல் வாக்குறுதிகளை வெளி யிட்டுள்ளார். இவரது வாக்குறுதி களால் அதிமுக, திமுகவினர் ஆடிப்போய் உள்ளனர்.
தனது 35 வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கையில், "தொகுதி மக்கள் அனைவருக் கும் ஐ-போன் வழங்கப்படும். தொகுதி சில்ெலன்று இருக்க 300 அடி உயர செயற்கை பனி மலை உருவாக்கப்படும்.
"விடுமுறை நாட்களில் மக்கள் பொழுதுபோக்குவதற்கு செயற்கை கடல் உருவாக்கப்படும். தேர்ந்து எடுக்கப்படும் 10 பேர் 100 நாட்கள் சுற்றுப்பயணமாக நிலவுக்கு அழைத்துச் செல்லப்படு வர்.
"இல்லத்தரசிகளுக்கு வீட்டு வேலை செய்துதர 'ரோபோ' வழங்கப்படும்.
"இளைஞர்கள் தொழில் தொடங்க ஆளுக்கு ரூ.1 கோடி மானியம், போக்குவரத்து நெரி சலைக் குறைக்க கால்வாய்கள் வெட்டி வீட்டுக்கு ஒரு படகு வழங்கப்படும்," என வாக்குறுதி களை அள்ளி வீசியுள்ளார்.

