சென்னை: சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் இரு மடங்காக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
10 நாள்களுக்கு முன்பு வரை 100 பேரை பரிசோதித்தால் ஒரு வருக்கு இருந்த கிருமித்ெதாற்று தற்போது 100 பேரை பரிசோதித்தால் இருவருக்கு இருப்பது உறுதி செய்யப்படுவதால், இப்பாதிப்பு இரு மடங்காக அதிகரித்துள்ளதாக ராதாகிருஷ்ணன் கூறினார்.
இதற்கிடையே, சென்னையில் தனியார் நிறுவன ஊழியர்கள் 40 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப் பட்டிருப்பது உறுதியானது.
சென்னையில் இயங்கி வரும் ஒரு தனியார் நிறுவனத்தின் மூன்று கிளைகள் பெருங்குடி, தரமணி, கந்தன்சாவடியில் இயங்கி வருகின்றன. இங்கு பணியாற்றும் 40 ஊழியர்களுக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்த நிறுவனத்தில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனைகள் செய்ய உள்ளனர்.

