ஓபிஎஸ்: சொந்த செலவில் மைதானம் கட்டித் தருகிறேன்

ஓபிஎஸ்: சொந்த செலவில் மைதானம் கட்டித் தருகிறேன்

1 mins read
91ae2bf5-de12-4ddb-801a-a7ee069b3b8d
போடிநாயக்கனூர் தொகுதிக்குட்பட்ட சீலையம்பட்டியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அப்பகுதி இளைஞர்களுக்கு தனது சொந்த செலவில் விளையாட்டு மைதானம் கட்டித்தருவதாக வாக்குறுதி அளித்தார். படம்: ஊடகம் -

தேனி: ஒன்­பது, பத்து, பதி­னொன் றாம் வகுப்பு மாண­வர்­க­ளைப் போலவே தங்­க­ளுக்­கும் தேர்ச்சி அளிக்­க­வேண்­டும் என்று 'ப்ளஸ் 2' மாண­வர்­கள் சிலர் துணை முதல்­வர் ஓ பன்­னீர்­செல்­வத்­தி­டம் கோரிக்கை விடுத்­த­னர்.

இது­கு­றித்து முதல்­வ­ரு­டன் கண்­டிப்­பாக ஆலோ­சிப்­ப­தாக ஓபி­எஸ் வாக்­கு­றுதி அளித்­தார்.

கிரு­மிப் பர­வல் கார­ண­மாக தமி­ழ­கத்­தில் மீண்­டும் பள்­ளி­கள் மூடப்­பட்­டுள்­ளன. 9 முதல் 11ஆம் வகுப்பு வரை தேர்­வு­கள் ரத்து செய்­யப்­பட்­டுள்­ளன.

ஆனால், பொதுத் தேர்­வெ­ழு­தும் 12ஆம் வகுப்பு மாண­வர்­க­ளுக்கு மட்­டும் அவர்­க­ளின் எதிர்­கா­லம் கருதி தொடர்ந்து பாடங்­கள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், தேனி மாவட்­டம், போடி­யில் மீண்­டும் போட்­டி­யி­டும் ஓ பன்­னீர்­செல்­வத்­தி­டம் கூட்­டத்­தில் இருந்த மாண­வர்­களில் சிலர், "எங்­க­ளுக்கு விளை­யாட மைதானம் கட்­டிக்­கொ­டுங்­கள்," என்­றனர்.

சிரித்­துக்­கொண்டே "சம­யம் பார்த்து கேட்­கி­றீங்­க­ளேப்பா," என்று கூறிய ஓபி­எஸ், "கண்­டிப்­பாக உரிய இடம் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு எனது சொந்த செல­வில் மைதா­னம் கட்­டித் தரு­கி­றேன்," எனக் கூறி­னார்.