தேனி: ஒன்பது, பத்து, பதினொன் றாம் வகுப்பு மாணவர்களைப் போலவே தங்களுக்கும் தேர்ச்சி அளிக்கவேண்டும் என்று 'ப்ளஸ் 2' மாணவர்கள் சிலர் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து முதல்வருடன் கண்டிப்பாக ஆலோசிப்பதாக ஓபிஎஸ் வாக்குறுதி அளித்தார்.
கிருமிப் பரவல் காரணமாக தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. 9 முதல் 11ஆம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆனால், பொதுத் தேர்வெழுதும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அவர்களின் எதிர்காலம் கருதி தொடர்ந்து பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தேனி மாவட்டம், போடியில் மீண்டும் போட்டியிடும் ஓ பன்னீர்செல்வத்திடம் கூட்டத்தில் இருந்த மாணவர்களில் சிலர், "எங்களுக்கு விளையாட மைதானம் கட்டிக்கொடுங்கள்," என்றனர்.
சிரித்துக்கொண்டே "சமயம் பார்த்து கேட்கிறீங்களேப்பா," என்று கூறிய ஓபிஎஸ், "கண்டிப்பாக உரிய இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு எனது சொந்த செலவில் மைதானம் கட்டித் தருகிறேன்," எனக் கூறினார்.

