இணையம் வழி அதிமுக பணப்பட்டுவாடா: திமுக புகாருக்கு தேர்தல் ஆணையம் பதில்

இணையம் வழி அதிமுக பணப்பட்டுவாடா: திமுக புகாருக்கு தேர்தல் ஆணையம் பதில்

1 mins read
11d48679-5142-40e2-95fb-09ef0613fa9c
-

சென்னை: அமைச்­சர்­கள் போட்டி­யி­டும் தொகு­தி­களில் பல்­வேறு முறை­கே­டு­கள் நடப்­ப­தாக திமுக குற்­றம்­சாட்டி உள்­ளது.

இது தொடர்­பாக அக்­கட்சி அளித்­துள்ள புகா­ருக்கு தேர்­தல் ஆணை­யம் பதில் அளித்­துள்­ளது.

அதில், தமி­ழக அமைச்­சர்­கள் போட்­டி­யி­டும் அனைத்து தொகுதி­க­ளி­லும் சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­களை உட­ன­டி­யாக தடுக்க அனைத்து மாவட்ட தேர்­தல் அதி­கா­ரி­க­ளுக்­கும் மாவட்ட ஆட்­சி­யர்­க­ளுக்­கும் தகுந்த நட­வடிக்­கைளை எடுக்க அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ள­தாக தேர்­தல் ஆணை­யம் குறிப்­பிட்­டுள்­ளது.

அமைச்­சர்­கள் எஸ்.பி.வேலு­மணி­யின் தொண்­டா­முத்­தூர் தொகுதி, எம்.ஆர்.விஜ­ய­பாஸ்­கர் போட்­டி­யி­டும் கரூர் தொகு­தி­யில் தேர்­தல் முறை­கே­டு­கள் அதி­க­ளவில் நடப்­ப­தா­கச் சொல்­கிறது திமுக.

குறிப்­பாக இணை­யம் வழி பணப்­ப­ரி­மாற்­றம் செய்­வ­தற்கு பயன்­படும் புதிய செய­லி­க­ளைப் பயன்­ப­டுத்தி வாக்­கா­ளர்­க­ளுக்கு பணப்­பட்­டு­வாடா நடக்­கிறது என்பது திமு­க­வின் குற்­றச்­சாட்டு.

இந்­நி­லை­யில் திமுக சுட்­டிக்­காட்டி உள்ள தொண்­ட­முத்­தூர் தொகு­தி­யில் மட்­டு­மல்­லா­மல், கோவை மாவட்­டத்­தின் பத்து சட்­டப்­பே­ர­வைத் தொகு­தி­க­ளி­லும் இது­போன்ற சந்­தே­கத்­திற்­கு­ரிய பணப்பரி­மாற்­றம் பரி­வர்த்­த­னை­க­ளைக் கண்­ட­றிய முறை­யான முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக­வும் தேர்­தல் ஆணை­யம் மேலும் தெரி­வித்­துள்­ளது.

திமுக அமைப்புச் செய­லா­ளர் ஆர்.எஸ்.பாரதி முறை­கே­டு­களை தடுக்­கக்­கோரி தமி­ழக தலை­மைத் தேர்­தல் அதி­காரி சத்­ய­பி­ரத சாகு, தலை­மைத் தேர்­தல் ஆணை­யத்­தி­டம் புகார் அளித்­தி­ருந்­தார்.

இதற்­கி­டையே முதல்­வர் எடப்­பாடி பழ­னி­சா­மி­யின் சொந்த மாவட்­ட­மான சேலத்­தில் தேர்­தல் பறக்­கும் படை­யி­னர் மேற்­கொண்ட வாக­னச் சோத­னை­யின்­போது ரூ.1.93 கோடி ரொக்­கப் பணம் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது.

தனி­யார் வங்­கிக் கிளை­யில் ஒப்­ப­டைப்­ப­தற்­காக கிருஷ்­ண­கிரி, தர்­ம­புரி மாவட்­டங்­களில் இருந்து அந்­தத் தொகை வேனில் கொண்டு செல்­லப்­பட்­ட­போது அதி­கா­ரி­கள் தடுத்து நிறுத்­தி­னர்.