விழுப்புரம்: "எடப்பாடி பழனிசாமி பல்லியோ, பாம்போ அல்ல பச்சோந்தி என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் (படம்), தமிழக முதல்வரை விமர்சனம் செய்துள்ளார்.
விழுப்புரத்தில் நேற்று இரவு தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது, ''எடப்பாடி பழனிசாமி பொய்களைக் கூறி வாக்குச் சேகரித்து வருகிறார்.
"அவர் நமக்குத் துரோகம் செய்துவிட்டார் என்று ஸ்டாலின் வக்காலத்து வாங்குகிறார். ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம்.
எடப்பாடி பழனிசாமி சொல்கிறார், நான் யார் காலிலும் விழவில்லையே? ஊர்ந்து செல்ல நான் என்ன பல்லியா, பாம்பா? என்று.
அதற்குப் பதிலளிக்கும் வகையில் டிடிவி தினகரன், "இல்லை அவர் பச்சோந்தி. சரியா, இல்லையா?," என்று கேட்டுள்ளார்.
"நாம் அதிமுகவைக் கேட்பதையெல்லாம் திமுகவினர் கேட்கிறார்கள். நாம் திமுகவை விமர்சித்துப் பேசுவதை எடப்பாடி பழனிசாமி கேட்கிறார். அந்த இரண்டு கட்சிகளுக்கும் பேச வேறு விஷயம் இல்லை.
"இரண்டு கட்சிகளையும் விமர்சித்துப் பேசும் ஒரே தகுதி அமமுகவுக்குத்தான் உண்டு.
"நாளாக நாளாக அவர்களை ஒருவிதப் பயம் சூழ்ந்துகொண்டது. ஆர்.கே.நகர் போல ரூ.6,000 ரூபாய் கூடக் கொடுப்பார்கள்.
"எல்லா மக்களிடமும் சொல்லிவிடுங்கள், அது உங்கள் பணம்தான். 6,000 ரூபாயை வாங்கிக்கொண்டு கதையை முடித்துவிடுங்கள் ஆர்.கே.நகர் போல,'' என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

