செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
cd51deb1-3643-420e-8f96-b3ce41730ac3
-

தஞ்­சா­வூர்: கல்விக் கூடங்களில் கொவிட்-19 பரவும் அபாயம்

தஞ்­சா­வூர்: தஞ்­சா­வூர் மாவட்­டத்­தில் மேலும் இரண்டு பள்­ளி­க­ளைச் சேர்ந்த ஏழு மாண­வர்களுக்கு கொவிட்-19 தொற்று நேற்று உறுதி செய்­யப்­பட்­டது. இத­னால் பாதிக்­கப்­பட்­டுள்ள மாண­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 205 ஆக அதி­க­ரித்­துள்­ளது. அம்­மா­பேட்­டை­யில் உள்ள அரசு உத­வி­பெறும் பள்­ளி­யில் 58 மாண­வி­கள், ஓர் ஆசி­ரியை மற்­றும் மாண­வி­க­ளின் பெற்றோ­ரில் 9 பேருக்­குத் தொற்று இருப்­பது அண்­மை­யில் தெரி­ய­வந்­தது. அதன் பின்பு கும்­ப­கோ­ணத்­தில் ஒரத்­த­நாடு, பட்டுக்­கோட்டை, ஆலத்­தூர், தஞ்சா­வூர் பள்ளி, தஞ்­சா­வூர் மகர் நோன்­புச்­சா­வடி ஆகிய இடங்களில் உள்ள பள்­ளி­களில் மாணவ, மாண­வி­ய­ருக்குத் தொற்று உறுதி­செய்­யப்­பட்­டுள்­ளது.

நெல்­லை­யில் தொற்று அதிகரிப்பு

திரு­நெல்­வேலி: திரு­நெல்­வேலி மாவட்­டத்­தில் குறைந்து வந்த கொரோனா தொற்று தற்­போது மீண்­டும் அதி­க­ரிக்க தொடங்கி உள்­ளது. இதைத்­தொ­டர்ந்து மாவட்ட நிர்­வா­கம் மற்­றும் சுகா­தா­ரத்­துறை சார்­பாக தடுப்பு நட­வ­டிக்­கை­கள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளது. நெல்லை அரசு மருத்­து­வ­மனை­யில் நேற்று 1,152 பேருக்கு மாதி­ரி­கள் எடுக்­கப்­பட்­டது. இதில் தூத்­துக்­குடி, தென்­காசி, நாங்­கு­நே­ரி­யில் தலா 2 பேருக்­கும், மாந­க­ராட்சிப் பகுதி, பாப்­பாக்­குடி, பாளை ஆகிய பகு­தி­களில் தலா ஒரு­வ­ருக்­கும் என 9 பேருக்குத் தொற்று உறு­தி­யா­னது.

4,024 வேட்பாளர்கள் போட்டி

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் 4,024 வேட்பாளர்கள் போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோ்தலில் போட்டியிட 7 ஆயிரத்து 250-க்கும் கூடுதலான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவை சனிக்கிழமை பரிசீலனைக்கு எடுக்கப்பட்டன. அதில், 4,500க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. 2,720க்கும் கூடுதலான மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

ஒரே மேடை­யில் ராகுல், ஸ்டா­லின்

சென்னை: ராகுல்­காந்தி- மு.க.ஸ்டா­லின் உள்­ளிட்ட அனைத்துக் கட்சிக் கூட்­ட­ணித் தலை­வர்­கள் பங்­கேற்­கும் மாபெ­ரும் தேர்­தல் பொதுக்­கூட்­டத்­திற்கு சேலத்­தில் 28ஆம் தேதி ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­ட­ணி­யின் வேட்­பா­ளர்­களை ஆத­ரித்து சேலம், சீலன்­நாயக்­கன்­பட்­டி­யில் ஞாயிற்­று­க்கி­ழமை 28ஆம் தேதி மாலை

4 மணிக்கு இந்த பொதுக்­கூட்­டம் நடை­பெ­று­கிறது.

மீண்­டும் தமி­ழ­கம் வரும் பிர­த­மர்

சென்னை: பிர­த­மர் மோடி தமி­ழ­கத்­திற்கு இரண்டு முறை வந்து தேர்­தல் பரப்­புரை மேற்­கொண்­டுள்­ளார். தற்­போது வேட்­பா­ளர்­கள் அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், 30ஆம் தேதி தாரா­பு­ரம் பொதுக்­கூட்­டத்­தில் தமி­ழக பார­திய ஜனதா தலை­வர் எல்.முரு­கனை ஆத­ரித்­தும், கூட்­டணிக் கட்சி வேட்­பா­ளர்­களை ஆத­ரித்­தும் ஒரே மேடை­யில் பேச உள்­ளார். இந்த கூட்­டத்­தில் முதல்­வர் எடப்­பாடி பழ­னி­சாமி, துணை முதல்­வர் ஓ.பன்­னீர்செல்­வம் ஆகி­யோ­ரும் பங்­கேற்­கி­றார்­கள்.

அ.தி.மு.க., பாஜக கூட்­ட­ணி­யில் உள்ள அனைத்துக் கட்­சித் தலை­வர்­களும் பங்­கேற்­கும் மாபெரும்­கூட்­டம் ஏப்­ரல் 2ஆம் தேதி மது­ரை­யில் நடை­பெறவுள்ளது.

கமல்­ஹா­சன் தொகு­தி­யில் சரத்­கு­மார்

கோயம்­புத்­தூர்: சமத்­துவ மக்­கள் கட்சித் தலை­வர் சரத்­குமார் தமி­ழ­கம் முழு­வ­தும் சுற்­று­ப்ப­ய­ணம் செய்து தங்­கள் கூட்­டணி வேட்­பா­ளர்­க­ளுக்கு ஆத­ரவு திரட்டி வரு­கி­றார். நாளை கோவை மண்­ட­லத்­தில் தங்­கள் கூட்­டணி வேட்­பா­ளர்­களை ஆத­ரித்து பிர­சா­ரம் செய்­கி­றார். மக்­கள் நீதி மய்யம் கட்சித் தலை­வர் கமல்­ஹா­சன் தலை­மை­யி­லான கூட்­ட­ணி­யில் சரத்­கு­மா­ரின் அகில இந்­திய சமத்­துவ மக்­கள் கட்சி 37 இடங்­களிலும் இந்­திய ஜன­நா­யக கட்சி 40 இடங்­களிலும் போட்டியிடுகின்றன. கமல்­ஹா­சன் போட்­டி­யி­டும் கோவை தெற்குத் தொகு­தி­யில் அவரை ஆத­ரித்து இன்று சரத்­கு­மார் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார்.

அதிமுக எம்.பி. ஜான் காலமானார்

சென்னை: அ.தி.மு.க. மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் 72 வயது முகமது ஜான். அவர் 2019 ஆம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். சட்டமன்றத் தேர்தலையொட்டி வாலாஜா அருகே தேர்தல் பரப்புரையில் ஈடுபட வந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்காக மருத்துவமனைக்குப் கொண்டு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது.