அமைச்சர் நடராஜன்: திருநாவுக்கரசு எம்பியை கண்டுபிடித்து தந்தால் பரிசளிப்பேன்

அமைச்சர் நடராஜன்: திருநாவுக்கரசு எம்பியை கண்டுபிடித்து தந்தால் பரிசளிப்பேன்

1 mins read
fd961de4-942a-4fb4-be87-0ea4291d5c19
-

திருச்சி: தேர்­தல் நடப்­ப­தற்கு முன்பு மக்­க­ளி­டம் வாக்கு கேட்டு வரும் ஒரு சில வேட்­பா­ளர்­களை, அதன்­பின்­னர் "கண்­டு­பி­டித்­துக் கொடுத்­தால் பரிசு" என்று அறி­விப்பு வெளி­யிட்­டால்­தான் அவர்­கள் வெளி உல­குக்கே தெரி­ய­வ­ரு­வார்­கள்.

இந்­தப் பட்­டி­ய­லில் உள்­ள­வர்­க­ளுள் ஒரு­வர்­தான் காங்­கி­ரஸ் எம்.பி. திரு­நா­வுக்­க­ரசு என்று அமைச்­சர் வெல்­ல­மண்டி என்.நட­ரா­ஜன் தெரி­வித்­துள்­ளார்.

"திமுக கூட்­டணி சார்­பாக நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் போட்­டி­யிட்டு வெற்­றி­பெற்ற திருச்சி எம்.பி. திரு­நா­வுக்­க­ரசை தேர்­த­லுக்­குப் பிறகு நீங்­கள் யாரா­வது தொகு­தி­யில் பார்த்­தி­ருக்­கி­றீர்­களா? அவரை கண்­டு­பி­டித்­துக் கொடுத்­தால் நான் உங்­க­ளுக்கு பரிசு தரு­கி­றேன்," என்று அமைச்­சர் மக்­க­ளி­டம் கோரிக்கை விடுத்­துள்­ளார்.

திருச்சி கிழக்கு சட்­ட­மன்­றத் தொகுதி அதி­முக வேட்­பா­ள­ரும் தமி­ழக சுற்­று­லாத்­துறை அமைச்­ச­ரு­மான என்.நட­ரா­ஜன் தனது பிர­சா­ரத்தை திருச்­சி­யில் உள்ள பெரிய கடை­வீதி, பைர­வர் கோவில் அரு­கில் தொடங்­கி­னார்.

அங்­குள்ள பல்­வேறு பகு­தி­களி லும் வீடு, வீடா­கச் சென்று வாக்கு சேக­ரித்து, பிர­சா­ரத்­தில் பேசிய அவர் கூறு­கை­யில், "இப்­போது திமுக கூட்­டணி சார்­பில் நிறுத்­தப்­பட்­டி­ருக்­கும் வேட்­பா­ள­ரும் வெளி­யூ­ரைச் சேர்ந்­த­வர்­தான்.

"திரு­நா­வுக்­க­ரசு எம்­பி­யைத் தேடு­வது போல் அவ­ரை­யும் தேட­வேண்­டிய சூழ்­நிலை உங்­க­ளுக்கு வரும்," என்­று கூறிய அமைச்­சர், "என்னை எப்­போது வேண்­டு­மா­னா­லும் நீங்­கள் சந்­திக்­க­லாம். ஏனெனில், நான் உங்­கள் வீட்­டிற்கு அரு­கில்தான் உள்ளேன். உங்­க­ளுக்­காக உழைக்க காத்­தி­ருக்­கி­றேன். எனக்கு இரட்டை இலை சின்­னத்­தில் வாக்­க­ளி­யுங்­கள்," என்று மக்­க­ளி­டம் கோரினார்.