வேலூர்: தமிழகத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள், கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களிடம் இருந்து தபால் வாக்குகளைச் சேகரிக்கும் பணி நேற்றுமுதல் தொடங்கியதாக மாவட்ட தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான கோ.பிரகாஷ் தெரிவித்தார்.
இப்பணி வரும் 31ஆம் ேததி வரை ஏழு நாள்கள் தொடர உள்ள தாகவும் அவர் மேலும் கூறினார்.
இதேபோல், வேலூர் மாவட்டத் திலும் தபால் மூலம் வாக்களிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள தாக அதிகாரிகள் தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 24,485 பேரும் மாற்றுத் திறனாளிகள் 7,124 பேரும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக தேர்தல் சமயத்தில் வாக்களிப்பின்போது வயதான முதியவர்களையும் உடல் ஊனமுற்ற வர்களையும் சமூக நல ஆர்வலர்களோ அல்லது அவர்களது உறவினர்களோ வாக்களிப்பு மையத்துக்கு தூக்கி வந்து வாக்களிக்கச் செய்வர். ஆனால், இம்முறை இந்திய தேர்தல் ஆணையம் முதியோர்கள் தபால் வாக்குகள் மூலம் வாக்க ளிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
செய்தியாளர்களிடம் கோ.பிரகாஷ் கூறுகையில், "வாக்களிப்பு மையங்களுக்கு முதியோர்களால் நேரடியாக வந்து வாக்களிக்கமுடியாத சூழலில், அவர்களது வீடுகளுக்கே தேர்தல் அலுவலர்கள் நேரில் சென்று வாக்குகளைப் பதிவு செய்து, அதனை காணொளியாக வும் எடுத்து, பெறப்பட்ட வாக்குகளை தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைப்பார்கள்," என்றார்.
சட்டமன்றத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குகளை வீடுகளுக்கே நேரடியாகச் சென்று பெறும் பணி நேற்று தமிழகம் எங்கும் பரவ லாகத் தொடங்கியது. இப்பணி இம்மாதக் கடைசி வரை நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கான பொருள்களை அலுவலர்களிடம் வழங்குகிறார் மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ். படம்: ஊடகம்

