மேற்குவங்கத்தில் 70%, அசாமில் 62% வாக்குப்பதிவு

மேற்குவங்கத்தில் 70%, அசாமில் 62% வாக்குப்பதிவு

2 mins read
bce9fe48-19ac-48da-9d32-66a6bf089671
-

மேற்கு வங்­கம்: மேற்கு வங்­கம், அசாம் ஆகிய மாநி­லங்­களில் சட்­டப் பேர­வைத் தோ்தலுக்­கான முதல் கட்ட வாக்­குப்­ப­திவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்­கா­ளர்­கள் வரி­சை­யில் நின்று ஆர்­வ­மு­டன் தங்­க­ளது வாக்­கு­க­ளைப் பதிவு செய்­த­னர்.

இந்த முதல் கட்ட வாக்­குப்­பதி வின்­படி நேற்று இந்­திய நேரப்­படி மாலை 4 மணி அசா­மில் 62.36%, மேற்கு வங்­கத்­தில் 70.17% வாக்­கு­கள் பதி­வா­கி­யுள்­ள­தாக தேர்­தல் ஆணை­யம் தெரி­வித்­தி­ருந்­தது.

மேற்கு வங்­கத்­தில் 294 உறுப்பி னா்களைக் கொண்ட மேற்கு வங்க சட்­டப்­பே­ர­வைக்கு 8 கட்­டங்­க­ளாக தோ்தல் நடை­பெ­று­கிறது.

இதை­ய­டுத்து முதற்­கட்­ட­மாக பழங்­கு­டி­யின மக்­கள் அதி­கம் வசிக்­கும் புரு­லியா, ஜாா்கிராம், பாங்­குரா, கிழக்கு மிது­ன­புரி, மேற்கு மிது­ன­புரி ஆகிய ஐந்து மாவட்­டங்­களில் உள்ள 30 தொகு­தி­களில் நேற்று வாக்­குப் பதிவு நடை­பெற்று வரு­கிறது.

அதே­போல் அசா­மில் 123 உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட சட்­டப்­பே­ர­வைக்கு மூன்று கட்­டங்­க­ளாகத் தேர்­தல் நடை­பெ­று­வ­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில், முதற்­கட்­ட­மாக 47 தொகு­தி­க­ளுக்கு வாக்­குப்­ப­திவு நடை­பெற்­றது.

வாக்­குப்­ப­தி­வை­யொட்டி மத்­திய காவல்­ப­டை­யி­னர் பாது­காப்­புப் பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

கொரோனா கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­யாக, கடந்த முறை­யை­விட தற்­போது மாநி­லம் முழு­வ­தும் கூடு­த­லாக 37% வாக்­குப்­ப­திவு மையங்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

முதல்­கட்­டத் தேர்­த­லுக்­காக 10,288 வாக்­குப்­ப­திவு மையங்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. ஒவ்­வொரு மையத்தி­லும் ஆயி­ரம் பேர் மட்­டுமே வாக்­க­ளிக்க அனு­ம­திக்­கப்­பட உள்­ளது. 30 தொகு­தி­களில் 191 வேட்­பா­ளர்­கள் களத்­தில் உள்­ள­னர்.

அசா­மில் 264 வேட்­பா­ளர்­கள் போட்­டி­யி­டும் நிலை­யில், 81 லட்­சம் வாக்­கா­ளர்­கள் வாக்­க­ளிக்க உள்­ள­னர். இங்கு மீண்­டும் ஆட்­சி­யைத் தக்கவைத்­துக் கொள்ள பாஜக கடும் முயற்­சி­யில் இறங்கி உள்­ளது.

தேர்­தல் நடை­பெ­றும் இடங்­களில் வாக்­க­ளிக்க ஏரா­ள­மா­னோர் வரி­சை­யில் காத்­தி­ருந்­த­னர்.

வாக்­குச்­சா­வ­டி­களில் உள்ளூர் போலி­சா­ரு­டன் துணை ராணு­வப் படை வீரர்­களும் பாது­காப்­புக்கு நிறுத்­தப்­பட்­டிருந்தனர்.