மேற்கு வங்கம்: பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வங்கதேசத்தில் நடந்த போராட்டத்தில் நால்வர் கொல்லப்பட்டனர்.
இருநாள் பயணமாக பிரதமர் மோடி வங்கதேசம் சென்றுள்ளார். இந்நிலையில் மோடியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிட்டகாங், டாக்கா நகரங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதில் சிட்டகாங் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலிசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் விரட்டினர்.
ஆனாலும் போராட்டம் தொடர்ந்ததால் கூட்டத்தைக் கலைக்க போலிசார் ரப்பர் குண்டுகளை வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த மோதலில் நால்வர் உயிரிழந்தாகக் கூறப்படுகிறது.
இதற்கிைடயே, மேற்குவங்கத்தின் 30 தொகுதிகளுக்கும் அசாம் மாநிலத்தின் 47 தொகுதிகளுக்கும் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
முதல்கட்டத் தேர்தல் நடைபெறும் இடங்களில் பதற்றமான பகுதிகள் இருப்பதால் கூடுதல் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேற்குவங்கத்தின் பகவான்பூர் தொகுதியில் வாக்குச்சாவடி மையம் அருகே துப்பாக்கிச்சூடு நடந்ததில் இரு பாதுகாப்புடை வீரர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

