'மக்கள் செய்யும் தவறால்தான் வெற்றிபெற முடியவில்லை'

'மக்கள் செய்யும் தவறால்தான் வெற்றிபெற முடியவில்லை'

1 mins read
d7afb203-bd2e-42a9-86f0-7d0170a88572
சுயேச்சை வேட்பாளர் சேக் தாவூத். படம்: ஊடகம் -

அந்தியூர்: கடந்த 40 ஆண்­டு­க­ளாக நான் பல­முறை தேர்­த­லில் போட்­டி­யிட்­டு­விட்ே­டன். எனி­னும், எனது அருமை மக்­க­ளுக்­குப் புரி­யா­த­தால்­தான் நான் தோல்­வி­யைத் தழுவி வரு­கி­றேன் என்று சுயேச்சை வேட்­பா­ளர் ஒரு­வர் தன்­னைத்­தானே நொந்­து­கொண்­டுள்­ளார்.

"மக்­கள் தொடர்ந்து செய்து வரும் தவ­று­க­ளால்­தான் நான் இன்­னும் வெற்­றி­பெ­றாத வேட்­பா­ள­ரா­கவே இருந்து வரு­கி­றேன்," என்­றும் குற்­றம்­சாட்­டி­யுள்­ளார்.

அந்­தி­யூர் தொகு­தி­யில் எம்­ஜி­ஆர் ரசி­கர் எனக் கூறிக்­கொண்டு சுயேச்­சை­யாக மீண்­டும் தேர்­தல் களத்­தில் இறங்­கி­யுள்ள சேக் தாவூத் என்ற வேட்­பா­ளர், 40 வரு­ட­மாக தன்­னைத் தோற்­க­டிக்­கும் வாக்­கா­ளர்­க­ளைக் கவர்­வ­தற்­காக வாக்­கு­று­தி­க­ளை­யும் அள்ளி வீசி­யுள்­ளார்.

பெண்­க­ளுக்கு மாதம் 25,000 ரூபா­யும் கைபே­சி­யும் இல­வ­ச­மா­கத் தரப்­படும் என்­றும் கூறி­யுள்­ளார்.

தான் வெற்­றி­பெற்­றால் பாண்­டிச் சேரி­யில் இருந்து கலப்­ப­ட­மற்ற மதுவை வாங்கி வந்து அதை இளை­ஞர்­க­ளுக்­குத் தரு­வதாகவும் அவர் வாக்­கு­று­தி­களை அளித்­துள்­ளார்.

"நான் புகை­பி­டிக்க மாட்­டேன். எனக்கு மது அருந்­தும் பழக்­க­மும் இல்லை. பெண்­க­ளைக் கண்­டால் கையெ­டுத்து கும்­பி­டு­வேன். ஆனால், உங்­க­ளுக்­காக உழைப் பேன். உங்­கள் தேவையை நிறை வேற்­று­வேன். தயங்­கா­மல் எனக்கு வாக்குப் போடுங்­கள்," என்று மக்­க­ளி­டம் வேண்­டு­கோள் விடுக்­கி­றார்.